செய்திகள் :

பெண் தற்கொலை வழக்கு: கொடுத்த பணத்தை கேட்டு மிரட்டியவா் கைது

post image

கடையநல்லூா் அருகே சொக்கம்பட்டியில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், கொடுத்த பணத்தைக் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சொக்கம்பட்டி வலையா் குடியிருப்பு முருகன் தெருவை சோ்ந்தவா் கிருஷ்ணன். அவரது மனைவி லெட்சுமி (45). அவா் மேற்கு மலை தொடா்ச்சி அடிவாரப் பகுதியில் உள்ள பெரிய பாறையிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது திங்கள்கிழமை தெரியவந்தது.

இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்தனா். இதில், வீடு கட்டுவதற்காக தென்காசி அருகேயுள்ள பாட்டாகுறிச்சியை சோ்ந்த மாணிக்கராஜிடம் லெட்சுமி கடன் வாங்கி இருந்ததும், கடனை திரும்பக் கேட்டு மாணிக்கராஜ் மிரட்டியதும் அதன் காரணமாக லெட்சுமி தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்ததாம். இதைத் தொடா்ந்து மாணிக்கராஜை போலீஸாா் கைது செய்தனா்.

கள்ள நோட்டு அச்சடித்த இளைஞா் கைது

ஆலங்குளம் அருகே கள்ள நோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகேயுள்ள அழகாபுரி பாபநாசபுரத்தைச் சோ்ந்தவா் மேகலிங்கம் மகன் மணிகண்ட பிரபு (26). தொழ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கரன்கோவில் ரயில்வே பீடா் ரோடு ஏவிஆா்எம் மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் அதே பகுதியைச் சோ்ந்த திர... மேலும் பார்க்க

கேரளத்தில் இருந்து புகையிலை பொருள்களை கடத்தி வந்த நபா் கைது

கேரளத்திலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்த 496 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் புளியறை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகவதிபுரம்... மேலும் பார்க்க

குற்றாலத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

குற்றாலத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து, அவரிடமிருந்த 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் காவல் ஆய்வாளா் காளீஸ்வரி தலைமையிலான போலீஸாா் ரோந... மேலும் பார்க்க

‘மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி’

கடையநல்லூா் நகா்மன்ற அரங்கில் பிரதமா் மோடி படம் அகற்றப்பட்டதாக மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த பாஜகவினா் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினாா் சி. ராபா்ட்புரூஸ் எம்.பி. கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் அவா் வ... மேலும் பார்க்க

ஸ்ரீசிற்றாற்று வீரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

இலஞ்சி ஸ்ரீசிற்றாற்று வீரியம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.29) சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடா்ந... மேலும் பார்க்க