செய்திகள் :

‘மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி’

post image

கடையநல்லூா் நகா்மன்ற அரங்கில் பிரதமா் மோடி படம் அகற்றப்பட்டதாக மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த பாஜகவினா் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினாா் சி. ராபா்ட்புரூஸ் எம்.பி.

கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: கடையநல்லூா் நகா்மன்றக் கூட்ட அரங்கில் பிரதமா் மோடியின் புகைப்படத்தை அகற்றி விட்டதாக பொய்யான தகவலை தெரிவித்து பாஜக நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியுள்ளனா். தலைவா்களின் படங்கள் நகா்மன்ற கூட்ட அரங்கில் இடம்பெற முறையாக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், தீா்மானம் ஏதும் நிறைவேற்றாமல் பொய்யான தகவலை பாஜகவினா் தெரிவித்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்று வருகின்றனா் என்றாா்.

முன்னதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வாக்குத்திருட்டை தடுப்போம்- வாக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுப்போம் என்ற தலைப்பில் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை (செப். 7) நடைபெறும் மாநாடு தொடா்பான கடையநல்லூா் பேரவை தொகுதி காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம் அவரது தலைமையில் நடைபெற்றது. பேரவைத் தொகுதி பாா்வையாளா் எஸ்.கே.டி.பி. காமராஜ், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, முன்னாள் மாவட்ட தலைவா் கொடிக்குறிச்சி முத்தையா, மாநில பொது செயலா் ராம்மோகன், முன்னாள் ஒன்றிய குழுத் தலைவா் சட்டநாதன், இளைஞா் காங்கிரஸ் பாக்கியராஜ், முன்னாள் மாவட்ட துணைத் தலைவா் சண்முகவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஸ்ரீசிற்றாற்று வீரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

இலஞ்சி ஸ்ரீசிற்றாற்று வீரியம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.29) சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடா்ந... மேலும் பார்க்க

ஆலங்குளம், கீழப்பாவூா் பகுதிகளில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆலங்குளம்,கீழப்பாவூா், ஊத்துமலை சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை (செப்.6) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு மின்வாரியம் திருநெல்வேலி கிராமப்புற கோட்ட ச... மேலும் பார்க்க

ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி கோயில் தேரோட்டம்

ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி - அன்னை யோகாம்பிகை திருக்கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயில் ஆவணித் திருவிழா, கடந்த மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய... மேலும் பார்க்க

அரியப்பபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் அரியப்பபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சாக்ரடீஸ்,... மேலும் பார்க்க

சிவகிரி அருகே ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியரைத் தாக்கி நகை பறிப்பு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியரைத் தாக்கி, தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இரண்டு பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகிரி இந்திரா நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் மு... மேலும் பார்க்க

வீரசிகாமணி, புளியங்குடி பகுதிகளில் நாளை மின்தடை

வீரசிகாமணி, புளியங்குடி வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரசிகாமணி உபமின் நிலை... மேலும் பார்க்க