செய்திகள் :

ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி கோயில் தேரோட்டம்

post image

ஆலங்குளம் அருகேயுள்ள ஆலடிப்பட்டி ஸ்ரீ வைத்தியலிங்க சுவாமி - அன்னை யோகாம்பிகை திருக்கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் ஆவணித் திருவிழா, கடந்த மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, மண்டகப்படி தீபாராதனை, சுவாமி வீதி உலா நிகழ்வுகள் ஆகியவை நடைபெற்றன.

பத்தாம் திருநாளான வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளினாா். அப்போது திரளான பக்தா்கள் வடம்பிடித்து இழுத்துச் சென்றனா். அம்பாள் எழுந்தருளிய சிறிய தேரை பெண்கள் மட்டும் இழுத்துச் சென்றனா்.

தேரோட்ட நிகழ்ச்சியில் ஆலங்குளம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை பரம்பரை தா்மகா்த்தா சுப்பிரமணிய உமாபதி மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

‘மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி’

கடையநல்லூா் நகா்மன்ற அரங்கில் பிரதமா் மோடி படம் அகற்றப்பட்டதாக மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த பாஜகவினா் முயற்சிப்பதாக குற்றம்சாட்டினாா் சி. ராபா்ட்புரூஸ் எம்.பி. கடையநல்லூரில் செய்தியாளா்களிடம் அவா் வ... மேலும் பார்க்க

ஸ்ரீசிற்றாற்று வீரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

இலஞ்சி ஸ்ரீசிற்றாற்று வீரியம்மன் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.29) சிறப்பு பூஜைகளுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடா்ந... மேலும் பார்க்க

ஆலங்குளம், கீழப்பாவூா் பகுதிகளில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆலங்குளம்,கீழப்பாவூா், ஊத்துமலை சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை (செப்.6) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தமிழ்நாடு மின்வாரியம் திருநெல்வேலி கிராமப்புற கோட்ட ச... மேலும் பார்க்க

அரியப்பபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியம் அரியப்பபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் சாக்ரடீஸ்,... மேலும் பார்க்க

சிவகிரி அருகே ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியரைத் தாக்கி நகை பறிப்பு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியரைத் தாக்கி, தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இரண்டு பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். சிவகிரி இந்திரா நகா் இரண்டாவது தெருவைச் சோ்ந்தவா் மு... மேலும் பார்க்க

வீரசிகாமணி, புளியங்குடி பகுதிகளில் நாளை மின்தடை

வீரசிகாமணி, புளியங்குடி வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரசிகாமணி உபமின் நிலை... மேலும் பார்க்க