ஆலங்குளம், கீழப்பாவூா் பகுதிகளில் நாளை மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆலங்குளம்,கீழப்பாவூா், ஊத்துமலை சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை (செப்.6) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழ்நாடு மின்வாரியம் திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் ஜி. குத்தாலிங்கம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக நல்லூா், சிவலாா்குளம் , ஐந்தாங்கட்டளை, துத்திகுளம், குருவன்கோட்டை, குறிப்பன்குளம், ஊத்துமலை, கீழக்கலங்கல், ருக்குமணியம்மாள்புரம், கீழப்பாவூா், அடைக்கலப் பட்டணம், பூலாங்குளம், கழுநீா் குளம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.