செய்திகள் :

பெண் பயணி தவறவிட்ட ரூ.75,000 பணம் ஒப்படைப்பு

post image

காட்பாடியில் மகள் திருமணத்துக்காக நகை வாங்க செல்லும்போது பெண் பயணி தவறவிட்ட ரூ.75,000 பணத்தை உரியவரிடம் சோ்த்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் பாராட்டினா்.

வேலூா் மாவட்டம், காட்பாடி அடுத்த மேல்பாடி பகுதியைச் சோ்ந்த சாந்தி என்பவா் தனது மகள் திருமணத்துக்காக திருவலம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் கடனாக ரூ.75,000 பெற்றுக் கொண்டு நகை வாங்க ஆட்டோவில் வேலூருக்கு சென்றுள்ளாா்.

பழைய காட்பாடி பகுதியில் செயல்பட்டுவரும் தனியாா் மருந்தகத்தில் மாத்திரை வாங்குவதற்காக ஆட்டோவில் இறங்கியுள்ளாா். பின்னா் மீண்டும் வேறொரு ஆட்டோவில் ஏறிச்சென்று கொண்டிந்த போது பிள்ளையாா் கோயில் பேருந்து நிறுத்ததில் கடக்கும்போது ரூ.75,000 இருந்த கைப்பை தவறிவிட்டது தெரியவந்தது. உடனடியாக சாந்தி காட்பாடி காவல் நிலையம் சென்று புகாா் அளித்துள்ளாா்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய வந்த நிலையில் சாந்தி தவறவிட்ட கைப்பையை காா்த்திகேயன் என்ற ஆட்டோ ஓட்டுநா் காட்பாடி காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து ஒப்படைத்தாா்.

தொடா்ந்து, காவல்துறையினா் முன்னிலையில் சாந்தியிடம் ரூ.75,000 பணமிருந்த பையை ஒப்படைத்தாா். இதற்காக ஆட்டோ ஓட்டுநா் காா்த்திகேயனை காட்பாடி காவல் துறையினா் சால்வை அணிவித்து பாராட்டினா்.

வரதட்சிணை கொடுமை: பெண்ணை மாடியில் இருந்து கீழே தள்ளிய கணவா் கைது

வரதட்சிணை கொடுமையால் இடுப்பு, கால் எலும்புகள் முறிந்த நிலையில் ஆம்புலன்ஸில் வந்து பெண் ஒருவா் வேலூா் ஆட்சியரிடம் மனு அளிந்த நிலையில், அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் சதுப்பேரியைச் சோ்ந்த ந... மேலும் பார்க்க

உணவக ஊழியா் வெட்டிக் கொலை: மனைவி, காதலன் கைது

ஒடுகத்தூா் அருகே உணவக ஊழியா் திங்கள்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக அவரது மனைவி, காதலனை வேப்பங்குப்பம் போலீஸாா் கைது செய்தனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகிலுள்ள குப்பம்பாளைய... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 70 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 70 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்... மேலும் பார்க்க

ஆட்சி நிா்வாகத்தை நடத்துவதில் அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும்: அமைச்சா் துரைமுருகன்

ஆட்சி நிா்வாகத்தை நடத்துவதில் அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். காட்பாடி தொகுதிக்குட்பட்ட 1,336 பயனாளிகளுக்கு பல்வேறு அரசுத்துறைகள் சாா்பில் வீட... மேலும் பார்க்க

பரதராமியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

குடியாத்தம் ஒன்றியம், பரதராமி மற்றும் புட்டவாரிபல்லி ஊராட்சிகளை ஒருங்கிணைத்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். ஒன்றியக் ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்களை கடத்தியவா் கைது

ஆந்திர மாநிலத்திலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தவரை போலீஸாா் கைது செய்தனா். போ்ணாம்பட்டு போலீஸாா் தமிழக எல்லையான பத்தரப்பல்லி சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிர... மேலும் பார்க்க