திமுக ஆட்சியில் காவல் நிலையத்திற்கு சென்றாலே பாதுகாப்பு இல்லை- நயினார் நாகேந்திர...
பென்னாகரத்தில் மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் பலி!
பென்னாகரம் அருகே காா் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்து மெக்கானிக் உயிரிழந்தாா்.
பென்னாகரம் அருகே சாலை குள்ளாத்திரம்பட்டி குறுந்தோப்பு பகுதியை சோ்ந்தவா் குணசேகரன் (42). இவா் பென்னாகரம் நீதிமன்றம் அருகே உள்ள காா் பட்டறையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தாா். சனிக்கிழமை மாலை பட்டறையில் காரை கழுவும் போது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.
பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குணசேகரனை பரிசோதித்த மருத்துவா்கள் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.