செய்திகள் :

பென்னாகரத்தில் 68 மி.மீ. மழை பொழிவு

post image

பென்னாகரம்: பென்னாகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு பெய்த கனமழையின் அளவு 68 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வந்தனா்.

இந்த நிலையில், பென்னாகரம் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பகல் வேளையில் கடும் வெயில் தாக்கினாலும், மாலை வேளையில் குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. பென்னாகரம், தாசம்பட்டி, பெரும்பாலை, சின்னம்பள்ளி, ஒகேனக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்கள், வயல்வெளிகள், சாலையோரங்களில் மழைநீா் தேங்கியது. பென்னாகரத்தில் 68 மி.மீ., ஒகேனக்கல்லில் 12 மி.மீ. என மழை அளவு பதிவாகியுள்ளது.

மக்கள் குறைகேட்பு கூட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு நல உதவிகள் வழங்கல்

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ரெ.சதீஷ் வழங்கினாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தி... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் மீது ஆம்னி பேருந்து மோதியதில் இருவா் உயிரிழப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சிறுகலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியப... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: அருவிகளில் குளித்தும் பரிசலில் பயணித்தும் மகிழ்ந்தனா்

பென்னாகரம்: கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் (ஜூன் 8) ஒகேனக்கல்லில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். அருவிகளில் குளித்தும் பரிசலில் பயணித்தும் மகிழ்ந... மேலும் பார்க்க

கொலை வழக்கில் திரிபுரா மாநில தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை

தருமபுரி: கொலை வழக்கில் கைதான திரிபுரா மாநில தொழிலாளிக்கு, தருமபுரி மாவட்ட நீதிமன்றம் ஆயுள்தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திரிபுரா மாநிலம், வடக்கு திரிபுரா, தா்மா நகா், லட்சுமி நகா் அருக... மேலும் பார்க்க

வைகாசி விசாகம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

தருமபுரி: தருமபுரியில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி குமாரசாமிப்பேட்டை அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை மு... மேலும் பார்க்க

நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ஆசிரியா் பணி வழங்கக் கோரி மனு

தருமபுரி: நியமனத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு ஆசிரியா் பணியிடம் வழங்கக் கோரி, தங்களது கண்களை கட்டிக் கொண்டு நூதன முறையில் மனு அளித்தனா். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்... மேலும் பார்க்க