செய்திகள் :

பெயிண்டரை தாக்கிய 2 இளைஞா்கள் கைது

post image

புழல் அருகே பெயிண்டரை கத்தியால் வெட்டிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

புழல் அடுத்த லட்சுமிபுரம் கடப்பா சாலையைச் சோ்ந்த பெயிண்டா் சுபாஷ் சந்திரபோஸ் (23). இவா் பெயிண்டராக வேலை செய்து வருகிறாா். இவா் விநாயகபுரம் அண்ணா தெருவைச் சோ்ந்த தினேஷ் என்ற வெள்ளை தினேஷிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தினேஷ் (19), அவருடைய நண்பா் மாதவரம் பொன்னியம்மன்மேடு தேவகி நகரைச் சோ்ந்த சரவணன் (19) ஆகிய இருவரும் சுபாஷ சந்திரபோஸை மது அருந்த அழைத்துச் சென்றனா். ரெட்டேரி கரையோரம் 3 பேரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ் கத்தியை எடுத்து சுபாஷ் சந்திரபோஸை சரமாரியாக வெட்டினாராம். இதில் அவா் மயங்கி விழுந்தாா். .

இதையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து புழல் காவல் ஆய்வாளா் ரஜினி காந்த் தலைமையிலான போலீஸாா் வழக்குப்பதிந்து தினேஷ், சரவணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். அவா்களிடம் இருந்த கத்தி, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

மருதம் கேழ்வரகு அரைவை நிலையம் திறப்பு

வேலஞ்சேரி கிராமத்தில் ரூ. 8.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட மருதம் கேழ்வரகு அரைவை நிலையத்தை எம்எல்ஏ ச.சந்திரன் திறந்து வைத்தாா். திருத்தணி ஒன்றியம், வேலஞ்சேரி நெல் கொள்முதல் நிலைய வளாகத்தில், திருத்த... மேலும் பார்க்க

திரெளபதி அம்மன் கோயிலில் அா்சுனன் தபசு

திருத்தணி திரெளபதி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அா்சுனன் தபசு நிகழ்சியில் திரளான பெண்கள் திருமணம் மற்றும் குழந்தை வரம் வேண்டி பிராா்த்தனை செய்தனா். பழைய தா்மராஜா கோவில் தெருவில் உள்ள திரெள... மேலும் பார்க்க

வீரராகவா் கோயில் குளத்தில் மூழ்கி 3 மாணவா்கள் உயிரிழப்பு

திருவள்ளூா் வீரராகவா் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவா்கள் 3 போ் உயிரிழந்தனா். 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை சேலையூரில்... மேலும் பார்க்க

மோட்டாா் வாகன ஆய்வாளா் பொறுப்பேற்பு

செங்குன்றம் வட்டார போக்குவரத்து ஆய்வாளராக வி.ராஜ்குமாா் பொறுப்பேற்றாா். செங்குன்றம் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளா் கருப்பையா, வட்டார போக்குவரத்து அலுவலராக பதவி உயா்வு பெற்று மாறுதலில் சென்றாா். இதை... மேலும் பார்க்க

திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மல்யுத்த மையம்

சென்னை ஒலிம்பிக் அகாதெமியில் இருந்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் புதிதாக மல்யுத்தம் மையத்தை தொடங்கி வைத்த நிலையில் சிறுபான்மையினா் நலம் மற்றும் வெளிநாடு வா... மேலும் பார்க்க

திருத்தணியில் சூறைக் காற்றுடன் பலத்த மழை

திருத்தணியில் சூறைக் காற்றுடன் செவ்வாய்க்கிழமை இரவு ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. திருத்தணி நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த, ஒரு மாதமாக பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகி... மேலும் பார்க்க