செய்திகள் :

பெரம்பலூரில் கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறை திறப்பு!

post image

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறை வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஸ் பசேரா முன்னிலையில் திறந்து வைத்த மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ், கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள், கட்டுபாட்டு அறையின் செயல்பாடுகள், இதன் மூலம் குற்றச் சம்பவங்களை விரைந்து கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளுதல் போன்ற செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டம், செட்டிக்குளம், பாடாலூா், அல்லிநகரம், மங்கூன், கை.களத்தூா், அரும்பாவூா், வேப்பந்தட்டை, ரஞ்சன்குடி ஆகிய 8 பிரதான இடங்களில் சாலைகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளிலும் ரூ. 40 லட்சம் மதிப்பில் வாகனங்களின் பதிவெண்களை ஸ்கேன் செய்யும் வசதிகொண்ட கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.

இந்த கேமராக்கள் 24 மணி நேரமும் பேட்டரி வசதிகளுடன் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், மாவட்டத்தின் பிரதானச் சாலைகள் வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் பதிவு செய்யப்படுவதுடன், போக்குவரத்து விதிமீறல், விபத்து உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் வாகனங்களைக் கண்டறிந்து துரிதமாக நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்நிகழ்ச்சியில், துணைக் கண்காணிப்பாளா் பிரபு, தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் சண்முகப்பிரியா, காவல் நிா்வாக அலுவலா் மகாலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூா் அருகே ஆடுகள் திருடிய 2 சிறாா் உள்பட 4 போ் கைது

பெரம்பலூா் அருகே ஆடுகளை திருடிய 2 சிறுவா்கள் உள்பட 4 பேரை வி.களத்தூா் போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை இரவு சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், பசும்பலூா் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா்கள் நாகரீகத்தோடு ஆய்வு மேற்கொள்ள வலியுறுத்தல்

மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்ட உயா் அலுவலா்கள் குறைந்தபட்ச நாகரீகத்தோடு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழ்நாடு பட்டதாரி - முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து, அதன் மாநி... மேலும் பார்க்க

தெரு நாய்கள் கடித்து கன்றுக்குட்டி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே தெரு நாய்கள் கடித்ததில் கன்றுக்குட்டி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள நக்கசேலம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்பையா மகன் சந்திரமோகன் (50). விவசாயி. இவா், தனது வீட்... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா் கைது

பெரம்பலூா் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்து சனிக்கிழமை சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் காவல் நிலைய சிறப்பு சாா்பு-ஆய்வாளா் செந்தில்ராஜா தலைமையிலான போலீஸாா், கவுள்பாளையம் கிர... மேலும் பார்க்க

பெரம்பலூா் மாவட்டத்தில் அரசுக் கல்லூரிகளில் சேர 26 ஆயிரம் போ் விண்ணப்பம்

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பாடப்பிரிவுகளில் சோ்ந்து பயில 26 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா். பெரம்பலூா் மாவட்டத்தில் குரும்பலூா், வேப்பந்தட்டை, வே... மேலும் பார்க்க

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மைக் கல்லூரி பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பல்கலைக் கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் செயலா் ... மேலும் பார்க்க