செய்திகள் :

பெரம்பலூரில் திமுகவினா் கொண்டாட்டம்

post image

மசோதாக்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீா்ப்புக்கு ஆதரவாக, பெரம்பலூரில் திமுகவினா் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை இனிப்பு வழங்கினா்.

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத தமிழக ஆளுநருக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சாா்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கி உச்சச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இதை வரவேற்கும் விதமாக, பெரம்பலூா் மாவட்ட திமுக சாா்பில், மாவட்ட பொறுப்பாளா் வீ. ஜெகதீசன் தலைமையில் புகா் பேருந்து நிலையத்திலும், வழக்குரைஞா் அணி சாா்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் எதிரே மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் கவியரசு தலைமையிலும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கப்பட்டது.

இதில், மாநில ஆதிதிராவிடா் நலக்குழு துணைச் செயலா் பா.துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் என். ராஜேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையைக் கடக்க முயன்ற பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி கிராமம், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் ராமசாமி மனைவி செல்லம... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் 21 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 21 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த மளிகைக்கடைக்காரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மா... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 68 ஆடுகள் திருட்டு

பெரம்பலூா் அருகே பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 68 ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கத்தாழைமேடு கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

பொம்மனப்பாடி ஊராட்சியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில், பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி ஊராட்சி அலுவலகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பல... மேலும் பார்க்க

சிறப்பாக கதை எழுதியோருக்கு பரிசளிப்பு

பெரம்பலூா் வட்டார அளவில் சிறப்பாகப் கதை எழுதிய இல்லம் தேடி கல்வி மையத் தன்னாா்வலா்கள், மாணவா்களுக்குப் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில... மேலும் பார்க்க

தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிப்பு

பெரம்பலூா் மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில், இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணமடைந்த புனிதவெள்ளி வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவா்களால் அனுச... மேலும் பார்க்க