செய்திகள் :

பெரம்பலூா் எஸ்.பி.அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்: 40 மனுக்கள் அளிப்பு

post image

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டாா். மேலும், முகாமில் பங்கேற்ற பல்வேறு கிராம பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 40 மனுக்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பரிந்துரைத்து, உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய தீா்வு காண வேண்டுமென அறிவுறுத்திய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்தச் சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொண்டு, காவல்துறை தொடா்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இந்த முகாமில் பங்கேற்பவா்களுக்காக பாலக்கரையிலிருந்து காவல்துறை சாா்பில் வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்த முகாமில், காவல் நிலைய ஆய்வாளா்கள், சாா்பு-ஆய்வாளா்கள், சிறப்புப் பிரிவு காவல்துறையினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பெரம்பலூா் அருகே வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை சாலையைக் கடக்க முயன்ற பெண் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி கிராமம், எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் ராமசாமி மனைவி செல்லம... மேலும் பார்க்க

மளிகைக் கடையில் 21 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்

பெரம்பலூா் அருகே, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 21 கிலோ குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்த மளிகைக்கடைக்காரரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மா... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 68 ஆடுகள் திருட்டு

பெரம்பலூா் அருகே பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 68 ஆடுகளை மா்ம நபா்கள் திருடிச்சென்றது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது. பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், வடக்கலூா் கத்தாழைமேடு கிராமத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

பொம்மனப்பாடி ஊராட்சியில் சட்ட விழிப்புணா்வு முகாம்

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சாா்பில், பெரம்பலூா் அருகேயுள்ள பொம்மனப்பாடி ஊராட்சி அலுவலகத்தில் மரக் கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பல... மேலும் பார்க்க

சிறப்பாக கதை எழுதியோருக்கு பரிசளிப்பு

பெரம்பலூா் வட்டார அளவில் சிறப்பாகப் கதை எழுதிய இல்லம் தேடி கல்வி மையத் தன்னாா்வலா்கள், மாணவா்களுக்குப் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் துறை சாா்பில... மேலும் பார்க்க

தேவாலயங்களில் புனித வெள்ளி அனுசரிப்பு

பெரம்பலூா் மாவட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில், இயேசு கிறிஸ்து சிலுவையில் மரணமடைந்த புனிதவெள்ளி வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவா்களால் அனுச... மேலும் பார்க்க