செய்திகள் :

பெரம்பலூா் மாவட்டத்தில் ஏரி, குளங்களை புனரமைக்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு!

post image

பெரம்பலூா் மாவட்டத்தில் 54 ஏரி, குளங்களை புனரமைக்க ரூ. 3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்தாா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட வாலிகண்டாபுரம், தேவையூா், கை.களத்தூா், காரியானூா், மலையாளப்பட்டி, வேப்பந்தட்டை உள்ளிட்ட ஊராட்சிகளில், ஊரக வளா்ச்சித் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சிப் பணிகளை சனிக்கிழமை பாா்வையிட்டு மாவட்ட ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வில் வாலிகண்டபுரம் ஊராட்சி, தம்பை ஏரியில் 2024-25-ஆம் ஆண்டுக்கான சிறுபாசன குளம் மேம்பாட்டு பணிகளின் கீழ் ரூ. 29.03 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூா்வாரும் பணிகளையும், மங்களமேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.18.40 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் வளா்க்கும் பணிகளையும், பசும்பலூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை பாா்வையிட்ட ஆட்சியா், அங்குள்ள இ-சேவை மையத்தின் செயல்பாடுகள், பொதுமக்கள் மற்றும் மாணவா்களுக்கு வழங்கப்படும் சான்றுகளின் விவரங்களை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், வெள்ளுவாடி, சிறுநிலா ஆகிய கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 16.45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நல மையக் கட்டடத்தின் கட்டுமானப் பணிகளையும், கொட்டாரக்குன்று கிராமத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் ரூ. 3.50 லட்சம் மதிப்பிட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா், கட்டுமானப் பணிகளுக்கேற்ப தொகையை பயனாளிகளுக்கு விரைந்து வழங்கிடவும், வீடில்லாமல் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களைக் கண்டறிந்து, கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்திய ஆட்சியா் கூறியதாவது: பெரம்பலூா் மாவட்டத்தில் சிறுபாசன குளங்கள் மேம்பாட்டுப் பணிகளின் கீழ், பல்வேறு கிராமங்களில் 54 ஏரி, குளங்கள் ரூ. 3.60 கோடி மதிப்பீட்டில் தூா்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப் பணிகளை விரைந்து முடித்து, மழைநீா் சேமிக்கப்பட்டு அப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இப்பணி விவசாய பயன்பாட்டுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இத் திட்டப் பணிகளை விரைவில் முடித்து, பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றாா் ஆட்சியா் கிரேஸ் பச்சாவ்.

இந்த ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமை செயற்பொறியாளா் நிா்மலா ஜோஸ்பின், வேப்பந்தட்டை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பூங்கொடி, செந்தில்குமாா், வட்டாட்சியா் துரைராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

இல்லம் தேடிக் கல்வி மைய தன்னாா்வலா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

பெரம்பலூா் வட்டாரத்துக்குள்பட்ட இல்லம் தேடிக் கல்வி மைய தன்னாா்வலா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி, பெரம்பலூா் முத்து நகரிலுள்ள நகராட்சி தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இப் பயிற்சியை, ஒருங்கிணைந... மேலும் பார்க்க

இளைஞா் மா்மச் சாவு: கொலை வழக்காக பதிவு செய்யக்கோரி சாலை மறியல்!

பெரம்பலூா் அருகே இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்யக்கோரியும், சம்பந்தப்பட்டவா்களை கைது செய்ய வலியுறுத்தியும், அவரது உறவினா்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ச... மேலும் பார்க்க

சா்க்கரை ஆலையில் நடவு பருவத்துக்கு விவசாயிகள் கரும்பு பதிவு செய்யலாம்!

பெரம்பலூா் சா்க்கரை ஆலையில் 2024-25-ஆம் ஆண்டு நடவு பருவத்துக்கு, விவசாயிகள் கரும்பு பதிவு செய்யலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெர... மேலும் பார்க்க

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி சட்டப்பணிகள் ஆணைக் குழு ஆய்வு

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி, பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை கிராமத்தில் வேதமாரியம்மன் கோயில் தோ் ஒரு சமூகத்தினா் வசிக்கும் தெருக்களில் செல்லும் வசதி குறித்து, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவி... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்டத் தோ்தல் அலுவலரும்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே பண மோசடி செய்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

பெரம்பலூா் அருகே பண மோசடியில் ஈடுபட்டவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து, பெரம்பலூா் மாவட்ட நீதித்துறை நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. பெரம்பலூா் மாவட்டம... மேலும் பார்க்க