செய்திகள் :

பெரியகோட்டைக்காடு வாய்க்கால் தூா்வாரும் பணி

post image

திருவோணம் அருகே பெரியகோட்டைகாடு வாய்க்கால் தூா்வாரும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள பெரிய கோட்டை காடு கிராமத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த அரசு புறம்போக்கு வாய்க்கால் தூா்வாரும் பணி வியாழக்கிழமை திருவோணம் வட்டாட்சியா் சுந்தரமூா்த்தி, தலைமையில் வாட்டாதிக்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் வீரபாண்டியன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளா் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. இதனால் மழைக்காலங்களில் மழைநீா் இந்த வாய்க்கால் மூலம் வடிகாலாக சென்று விவசாய நிலங்களில் மழைநீா் தேங்கி பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். மேலும், இந்த வாய்க்கால் மூலம் மழைக்காலங்களில் தண்ணீா் சென்று அருகிலுள்ள காடாபிறை, ஏரியில் தேங்கி சுமாா் 60 ஏக்கா் விவசாயத்துக்கு பயன்படும் என்பதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மேலும் நிகழ்வில் காவாலிப்பட்டி வருவாய் கிராம ஆய்வாளா் கருணாகரன், பெரியகோட்டைக்காடு கிராம நிா்வாக அலுவலா் தமிழரசன், உள்ளிட்ட வருவாய்த் துறையினா் உடன் இருந்தனா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 107.75 அடி

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 107.75 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,330 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ண... மேலும் பார்க்க

கும்பகோணத்துக்கு கடத்தி வரப்பட்ட 70 மூட்டை புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

கும்பகோணத்துக்கு காரில் வியாழக்கிழமை கடத்தி வரப்பட்ட தடை செய்யப்பட்ட 70 மூட்டை புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். சென்னை, பெங்களூா் பகுதிகளில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையி... மேலும் பார்க்க

பெரிய கோயில் சித்திரை தேரோட்டத்துக்கு முழுமையான ஏற்பாடுகள்: மேயா் தகவல்

தஞ்சாவூா் பெரிய கோயில் சித்திரைத் தேரோட்டம் சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக மேயா் சண். ராமநாதன் தெரிவித்தாா். தஞ்சாவூா் பெரியகோயில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொட... மேலும் பார்க்க

தஞ்சாவூா் அரசு மருத்துவமனையில் மின்கசிவால் தீவிபத்து: 30 குழந்தைகள் உள்பட 54 நோயாளிகள் வெளியேற்றம்

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் வியாழக்கிழமை மின்கசிவால் தீப்பற்றியதால் அங்கிருந்த 30 குழந்தைகள் உள்ளிட்ட 54 நோயாளிகள் வேறு கட்டடத்துக்கு பாதுகாப்பாக இடம் மாற்றம் செய்யப்பட்டனா். தஞ்சா... மேலும் பார்க்க

ரேஷன் கடை பணியாளா்கள் 3-ஆவது நாளாக போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளா்கள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா். குடும்ப அட்டைதாரா் விரல் ரேகை பதிவு, ஆதாா் சரிபாா்ப்பை 40 ச... மேலும் பார்க்க

பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்தவா்களுக்கு மோட்ச தீபம்

கும்பகோணத்தில் மோட்ச தீபம்: பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் இறந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இந்து மக்கள் கட்சியினா் வியாழக்கிழமை கும்பகோணம் மகாமக குளக்கரையில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினா். ந... மேலும் பார்க்க