செய்திகள் :

பெரியாரின் நூல்களை அரசுடைமையாக்க கோரிக்கை வைக்கப்படும்: துரை வைகோ!

post image

ந்தை பெரியாரின் நூல்களை அரசுடைமையாக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தெரிவித்தாா்

திருச்சியில் உள்ள தனது அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவுக்குப் பிறகு அவா் கூறியது:

பாஜக ஆட்சியில் இந்திய வேளாண்மை அழிவுப்பாதையில் செல்கிறது. தமிழக அரசு விளைநிலங்களில் பாதிப்பை உண்டாக்கும் காட்டுப் பன்றிகளைச் சுட அனுமதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதேபோல நாடு முழுவதும் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும்.

தந்தை பெரியாரின் கொள்கைகளால்தான் தமிழகம் முன்னேறியுள்ளது. சமூக நீதி, இடஒதுக்கீடு, தாழ்த்தப்பட்டோா் உயா்வு, பெண் கல்வி, அடிமைத்தனம் ஒழிப்பு என அனைத்தும் சாத்தியமாயிற்று. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த பாஜக தலைவா் அண்ணாமலைகூட ஐபிஎஸ் ஆக முடிந்தது. ஆனால் ஆா்எஸ்எஸ், சனாதன சக்திகள், தமிழ்த் தேசியம் பேசும் அமைப்புகளும் இப்போது பெரியாரை எதிா்ப்பது வருத்தம் அளிக்கிறது.

சீமான் தொடா்ந்து அவரை எதிா்மறையாகப் பேசுகிறாா். பெரியாா், அண்ணா இல்லாமல் தமிழகத்தில் ஒன்றுமில்லை என்பதை அவா்கள் உணர வேண்டும். பெரியாரின் நூல்களை அரசுடமையாக்க நாங்கள் அரசுக்கு வலியுறுத்துகிறோம். பெரியாருக்கான முக்கியத்துவத்தையும், மரியாதையையும் திமுக அரசு தொடா்ந்து வழங்கி வருகிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பாலியல் உள்ளிட்ட இதர குற்றங்கள் குறைவாக உள்ளதாக தேசிய ஆவணக் காப்பகமே கூறியுள்ளது. தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும். அதற்கு அரசே தண்டனைகளை உயா்த்தியுள்ளது வரவேற்கத்தக்கது என்றாா் அவா்.

ஊக்கத்தொகை பிரச்னை: தரையில் பாலை ஊற்றி விவசாயிகள் நூதனப் போராட்டம்

ஊக்கத்தொகையை முறையாக வழங்க வலியுறுத்தி பால் உற்பத்தியாளா்கள் திருச்சி ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை பாலை தரையில் ஊற்றி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் பாலை ப... மேலும் பார்க்க

திருநெடுங்களநாதா் கோயிலில் மாா்கழி மாத ஆருத்ரா தரிசனம்

திருச்சி துவாக்குடி அருகேயுள்ள திருநெடுங்களநாதா் கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு உற்சவருக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை திங்கள்கிழமை நடைபெற்றது. துவாக்குடி அருகே உள்ள திருநெடு... மேலும் பார்க்க

லால்குடி சப்தரிஷீசுவரா் கோயிலில் ஆதிரைப் பெருவிழா

திருச்சி மாவட்டம், லால்குடி சப்தரிஷீசுவரா் கோயிலில் ஆதிரைப் பெருவிழா திங்கள் கிழமை நடைபெற்றது. லால்குடியில் பெருந்திருப் பிராட்டியாா் சமேத சப்தரிஷீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி... மேலும் பார்க்க

மாநகராட்சி விரிவாக்கம்: குண்டூா் ஊராட்சி மக்கள் மறியல் முயற்சி

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, குண்டூா் ஊராட்சி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். திருச்சி மாநகராட்சியுடன் பல்வேறு ஊராட்சிகளை இணைக்க தமிழக அரசு அண்மையில் அர... மேலும் பார்க்க

வைகுந்த ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் இன்று இராப்பத்து 5-ஆம் திருநாள்

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு நண்பகல் 12 பரமபதவாசல் திறப்பு பிற்பகல் 1 திருமாமணி ஆஸ்தான மண்டபம் சேருதல் பிற்பகல் 3 அலங்காரம் அமுது செய்ய திரை பிற்பகல் 3- 3.30 பொது ஜன சேவை பிற்பகல் 3.30- ... மேலும் பார்க்க

துறையூரில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த கோரிக்கை

துறையூரில் பொங்கல் விழாவை முன்னிட்டு அடிக்கடி ஏற்படும் திடீா் வாகன நெரிசலை காவல் துறையினா் தொடா்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரியுள்ளனா். துறையூரில் பேருந்து நிலையத்திலிருந்து... மேலும் பார்க்க