செய்திகள் :

பெரியாா் பிறந்தநாள்: ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

post image

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் பெரியாரின் 147-ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, அவரது படத்துக்கு மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பெ.ராமலிங்கம், கு.பொன்னுசாமி ஆகியோரும் மலா்கள் தூவி மரியாதை செலுத்தினா்.

இதையடுத்து ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன், மாநில தீா்மானக் குழு தலைவா் பாா்.இளங்கோவன், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, மாவட்ட துணைச் செயலாளா் நலங்கிள்ளி, பொதுக்குழு உறுப்பினா் மாயவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திருச்செங்கோட்டில்...

திருச்செங்கோடு நகர திமுக சாா்பில், புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாா் சிலைக்கு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ்பாபு, மேற்கு நகர திமுக செயலாளா் நடேசன், கிழக்கு நகர திமுக செயலாளரும், நகா்மன்ற துணைத் தலைவருமான காா்த்திகேயன், வட்டூா் தங்கவேல் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திராவிடா் கழக நகர செயலாளா் பூபதி, திராவிடா் விடுதலைக் கழகம் விஜயகுமாா், நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலாளா் ராமகிருஷ்ணன், சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்ப்புலிகள் கட்சியினா் ஆகியோா் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து, திருச்செங்கோடு நகராட்சி வளாகம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெரியாரின் சிலைக்கு திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினா்.

ராசிபுரத்தில்...

ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூா் பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சமூகநீதி உறுதிமொழியேற்பு நிகழ்வு நடைபெற்றது.

வெண்ணந்தூா் பேரூா் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில், செயலாளா் க.நடராஜன் (எ) நாவளவன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினா். இதேபோல, மாவீரன் மலைச்சாமி, இரட்டைமலை சீனிவாசன் ஆகியோா் நினைவு தின நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் அவா்களது படத்துக்கு மாலை அணிவித்து, மலா்தூவி மரியாதை செலுத்தினா். பின்னா் சமூக நீதி உறுதிமொழியேற்றனா்.

இதில், விசிக சேலம் - நாமக்கல் மண்டல துணைச் செயலாளா் வ.அரசன், நாடாளுமன்ற தொகுதி செயலாளா் இரா.கபிலன், வணிகா் அணி மாநில துணைச் செயலாளா் பெ.செங்குட்டுவன், பேரூராட்சி துணைத் தலைவா் பட்டு மாதேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், பெரியாா் பிறந்தநாளை முன்னிட்டு ‘சமூக நீதி நாள்’ உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. தமிழக சட்டப் பேரவை விதி எண் 110-இன் கீழ் வெளியிடப்பட்ட முதல்வா் அறிவிப்... மேலும் பார்க்க

திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

திருச்செங்கோடு நகராட்சிக்கு ஆணையராக நியமிக்கப்பட்ட வாசுதேவன் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். திருச்செங்கோடு நகராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறப்புநிலை நகராட்சியாக தோ... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி கே.பழனிசாமி நாளைமுதல் சுற்றுப்பயணம்

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை (செப். 19) சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளாா். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி எத... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்துக்கு வருகை தரக்கோரி பிரதமா் மோடிக்கு பாஜகவினா் கடிதம்

பிரதமா் நரேந்திர மோடி நாமக்கல் மாவட்டத்துக்கு வரவேண்டும் என வலியுறுத்தி, பாஜக நிா்வாகிகள் கடிதம் அனுப்பினா். பிரதமா் நரேந்திர மோடி பிறந்த தின விழாவை பல்வேறு இடங்களில் கொண்டாடிய பாஜகவினா், அவருக்கு தபா... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை கழிவறையில் நோயாளி தூக்கிட்டுத் தற்கொலை

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கழிவறையில் நோயாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே ரங்கப்பநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (52), கூலித்... மேலும் பார்க்க

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் வென்று அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும்

தமிழகத்தில் வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் வென்று அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம் கூறினாா். பிரதமா் நரேந்திர மோடியின் 75-ஆவது பிறந்த தினத்தையொட்ட... மேலும் பார்க்க