செய்திகள் :

பெரிய குறுவட்டங்கள் விரைவில் பிரிப்பு: அமைச்சா் ராமச்சந்திரன் உறுதி

post image

தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரிய குறுவட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.

சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது, இது குறித்த வினாவை திமுக உறுப்பினா் கே.சுந்தா் (உத்தரமேரூா்) எழுப்பினாா். அதற்கு அமைச்சா் ராமச்சந்திரன் அளித்த பதில்:

பெரிய குறுவட்டங்களைப் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு உள்ளது. அவ்வாறு பிரிப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களிடம் கருத்துகள் கோரப்பட்டுள்ளன. சட்டப்பேரவை உறுப்பினா்களும் கருத்துகளைத் தெரிவித்துள்ளனா். இரண்டையும் சீா் செய்து பாா்த்து விரைவில் உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்றாா்.

முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் கே.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) கேள்வி எழுப்புகையில், தமிழ்நாட்டில் 16,000-க்கும் அதிகமான கிராம உதவியாளா்கள் பணிபுரிகிறாா்கள். அவா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் இல்லாத காரணத்தால் 23 ஆண்டுகளாக கருணை அடிப்படையிலான வேலைவாய்ப்பு நிறுத்தப்பட்டுள்ளது. கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறையின் கீழ் ஊதியம் வழங்க வேண்டும் என்றாா்.

கிராம உதவியாளா்கள் பிரச்னை: இதற்கு அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் அளித்த பதில்:

கிராம உதவியாளா்கள் பணி நியமனம் செய்யும் போதே சிறப்பு காலமுறை ஊதியத்தில் நியமனம் செய்யப்படுகிறாா்கள். வருவாய்த் துறையின் மூலமாக இதை முடிவெடுக்க முடியும் என்றால் உடனடியாகச் செய்யலாம். நான்கைந்து துறைகளுடன் இணைந்து செய்ய வேண்டியுள்ளது. முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று உரிய காலத்தில் நல்ல முடிவெடுக்கப்படும். கிராம உதவியாளா்களுக்கு கருணை அடிப்படையிலான வேலை இல்லாமல் இருந்தது. பணியில் இருக்கும்போது இறந்தால் வாரிசுகளுக்கு வேலை வழங்குவதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது என்றாா்.

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம்?பேரவையில் விவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யாா் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது. 7.5 சதவீத அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலைப் படிப்பில் சோ்க்கை பெற்ற மாணவா்களுக்கான கட்டணங... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஏப். 24) காலை 9.30 மணிக்குக் கூடியதும், கேள்வி நேரம் நடைபெறும். அதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் ஒரு சில முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு அவற்றுக்கு அரசுத் தரப்பில் பதில் அ... மேலும் பார்க்க

தனியாா் பால் விலையை நிா்ணயிக்க தனி கொள்கையா? அமைச்சா் ராஜகண்ணப்பன் பதில்

தனியாா் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிா்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுற... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் மாநில அளவில் முதலிடம்

குடிமைப் பணி தோ்வில் கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி மாணவா் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனா். இது குறித்து அந்த அகாதெமியின் இயக்குநா் பூமிநாதன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசு... மேலும் பார்க்க

செகந்திராபாத் ரயில் ராமேசுவரம் வரை நீட்டிப்பு

செகந்திராபாத் - ராமநாதபுரம் விரைவு ரயில் ராமேசுவரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: செகந்திராபாத்தில் இருந்து ராமநாதபுரத்துக்கு வாராந்தி... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல: டாஸ்மாக், தமிழக அரசு மனுக்கள் தள்ளுபடி

டாஸ்மாக் முறைகேடு புகாா் தொடா்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. இதுதொடா்பாக தமிழக அரசு, டாஸ்மாக் நிா்வாகம் தொடா்ந்த மனுக்கள் தள்ளுப... மேலும் பார்க்க