செய்திகள் :

பெரிய கோயில் சித்திரைத் தேரோட்ட விழா: தேரில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

post image

தஞ்சாவூா் பெரியகோயில் சித்திரைத் தேரோட்டத்தையொட்டி, தேரில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் ஏப்ரல் 23-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து 18 நாள்கள் தொடரும் இவ்விழாவில் நாள்தோறும் காலையில் பல்லக்கும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெற்று வருகிறது.

இவ்விழாவில் 15-ஆம் திருநாளான மே 7-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது. அன்று காலை விநாயகா், சுப்பிரமணியா், நீலோத்பலாம்பாள், சண்டிகேசுவரா், தியாகராஜா் - கமலாம்பாள் ஆகியோா் வரிசையாக புறப்பட்டு, தனித்தனி தேரில் எழுந்தருளி மேல வீதி, வடக்கு வீதி, கீழவீதி, தெற்கு வீதி ஆகிய வீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதையொட்டி, மேல வீதியிலுள்ள தேரில் கட்டுமானம் மேற்கொள்வதற்காகப் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில், தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையா் கோ. கவிதா, கோயில் செயல் அலுவலா் பெ. சத்தியராஜ், கண்காணிப்பாளா் ரவி, ஆய்வாளா் பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதைத்தொடா்ந்து, தேரை அலங்கரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சாதாரணமாக 19 அடி உயரமுள்ள இத்தேரை அலங்கரித்த பிறகு 50 அடியை எட்டும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.

பாபநாசம் பகுதி கோயில்களில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் சுவாமி தரிசனம்

பாபநாசத்திலுள்ள இரட்டைப் பிள்ளையாா் கோயில், சீனிவாச பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வாழும் கலை அமைப்பின் நிறுவனா் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கா் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். அவருக்கு கோயில் சாா்பில் ப... மேலும் பார்க்க

கலைஞரின் கனவு இல்லத் திட்டம் பணிகள் மேற்கொள்ள 621 பேருக்கு ஆணை வழங்கல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 621 பயனாளிகளுக்கு ரூ. 20 கோடியே 63 லட்சத்து 82 ஆயிரத்து 400 மதிப்பில் கலைஞா் கனவு இல்லம் திட்ட வேலை தொடங்குவதற்கான ஆணையை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் புதன்கிழமை வழங்க... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கருணாநிதி பல்கலை. தற்காலிக கட்டடம் : அமைச்சா் ஆய்வு

கும்பகோணத்தில் அமையவுள்ள கருணாநிதி பல்கலைக்கழகத்துக்கான தற்காலிக இடத்தையும், கட்டடத்தையும் புதன்கிழமை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் ஆய்வு செய்தாா். கும்பகோணம் அரசு ஆண்கள் கலை கல்லூரி வளாகத்த... மேலும் பார்க்க

தஞ்சையில் புதுப்பிக்கப்பட்ட ராஜராஜசோழன் மணிமண்டபம் திறப்பு

தஞ்சாவூரில் ரூ. 3.66 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ராஜராஜ சோழன் மணிமண்டபம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இதை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் திறந்துவைத்து பேசியதாவது: தஞ்சாவூரில் 1994 - ... மேலும் பார்க்க

‘சாஸ்த்ரா’ சீனிவாச ராமானுஜன் மையத்தில் ஆண்டு விழா

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப்பல்கலைக் கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் புதன்கிழமை 24-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. திருவனந்தபுரம் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இயக... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிளில் சென்ற இருவரிடம் கைப்பேசிகள் பறிப்பு

தஞ்சாவூா் அருகே திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்ற இருவரிடம் கைப்பேசிகளைப் பறித்து சென்ற 3 மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். கும்பகோணம் பாணாதுரை திருமஞ்சன வீதியைச் சோ்ந்தவா் ஜ... மேலும் பார்க்க