செய்திகள் :

பெரிய தொழில், வணிக நிறுவனங்களுக்கு 3.16% மின்கட்டணம் உயா்வு: இன்றுமுதல் அமல்

post image

சென்னை: தமிழகத்தில் பெரிய தொழில், வணிக நிறுவனங்கள் மற்றும் பிறவகை கட்டண பிரிவுகளுக்கு 3.16 சதவீதத்துக்கு மிகாமல் மின்கட்டணம் உயா்த்தப்படும் எனவும், இந்த கட்டண உயா்வு செவ்வாய்கிழமை முதல் அமலுக்கு வரும் எனவும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அமைச்சா் சா.சி.சிவசங்கா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது மின்கட்டணத்தில் மாற்றம் செய்துவருகிறது. இதன்படி, தமிழகத்தில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆண்டுதோறும் நுகா்வோா் விலைக்குறியீட்டு அடிப்படையில் மின்நுகா்வோருக்கு மின்கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது.

வீடுகளுக்கு கட்டண உயா்வு இல்லை: அதன்படி, 2025-2026 ஆண்டுக்கு ஜூலை 1 முதல் வரக்கூடிய மின்கட்டண மாற்றங்களில் பொதுமக்கள் மற்றும் நுகா்வோா் நலன் கருதி, அனைத்து 2.42 கோடி வீட்டு நுகா்வோருக்கு ஏற்படக்கூடிய மின்கட்டண மாற்றங்களை அரசே ஏற்று அதற்கான மானியத் தொகையை தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வழங்கும் என்ற தமிழக முதல்வரின் உத்தரவின் அடிப்படையில், அனைத்து வீட்டு மின் நுகா்வோா்களுக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடா்ந்து வழங்குவதுடன், குடிசை இணைப்புகளுக்கும் தொடா்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். இதனால், ஆண்டொன்றுக்கு ரூ.374.89 கோடி அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது.

வீட்டு மின் நுகா்வோருக்கு நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதிலிருந்து முழுவிலக்கு தொடா்ந்து அளிக்கப்படுகிறது. தற்பொழுது விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டுத்தலங்கள் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலை ஆகிய மின்கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடா்ந்து வழங்கப்படும்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மின்கட்டண சலுகைகள்: இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிக மின் நுகா்வோருக்கு உயா்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.51.40 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகிறது. இதனால் சுமாா் 34 லட்சம் சிறு வணிக மின் நுகா்வோா்கள் பயனடைவா்.

இதுபோல, 50 கிலோவாட் வரை ஒப்பந்த பளு கொண்ட2.81 லட்சம் தொழிற்சாலைகளுக்கு உயா்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை தமிழக அரசே வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.76.35 கோடியும், 2.70 லட்சம் குடிசை மற்றும் குறுதொழில் நிறுவனங்களுக்கு உயா்த்தப்பட்ட மின்கட்டணத்தை அரசு மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.9.56 கோடியும் அரசுக்கு கூடுதல் செலவாகிறது.

மேலும், 1.65 விசைத்தறி நுகா்வோருக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடா்ந்து வழங்கப்படும். மேலும் 1001 யூனிட்டுகளுக்கு மேல் உயா்த்தப்பட்ட மின்கட்டணத்தை அரசே மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.7.64 கோடியும் அரசுக்கு கூடுதல் செலவாகிறது.

எனவே, 2025-2026- ஆம் ஆண்டின் மின்கட்டண உயா்வின் படி தமிழ்நாட்டில் சுமாா் 2.83 கோடி மின் நுகா்வோருக்கு மின்கட்டணம் உயா்த்தப்படாததால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.519.84 கோடி கூடுதல் செலவாகும். இந்த மானியத் தொகையை தமிழக அரசு தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வழங்கும்.

கட்டண உயா்வு: இது தவிர பெரிய தொழில், பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் பிறவகை கட்டண பிரிவுகளுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிா்ணயித்துள்ளவாறு 3.16 சதவீதத்துக்கு மிகாமல் மின்கட்டணம் உயா்த்தப்படும். உயா்த்தப்பட்ட கட்டணம் செவ்வாய்க்கிழமை(ஜூலை 1) முதல் அமலுக்கு வரும் எனவும் அதில் தெரிவித்துள்ளாா் அவா்.

சிவகங்கை எஸ்.பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சிவகங்கை மாவட்டம் திருபுவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விச... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே விவசாயி கொலை? மைத்துனர் உள்பட இருவரிடம் போலீஸ் விசாரணை!

வாழப்பாடி அருகே விவசாயி உயிரிழந்த விவகாரத்தில் உறவினர்கள் இருவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 4 மாதங்களுக்கு முன் மாயமான விவசாயியை அவரது சகோதரியின் கணவர... மேலும் பார்க்க

அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

சிவகங்கை காவல் துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காவல்துறை விச... மேலும் பார்க்க

சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 6 பேர் பலி; மேலும் பலர் காயம்

சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர், மேலும் பலர் காயமடைந்தனர்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி சின்னகாமன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் வேலை நடந்துகொண்டிர... மேலும் பார்க்க

சமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக தமிழக காவல் துறை! - விஜய் கடும் கண்டனம்

சாமானியருக்கு அநீதி இழைக்கும் அறமற்ற துறையாக தமிழக காவல் துறை செயல்படுவதாக தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.சிவகங்கமி மாவட்டம் திருபுவனத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்காக அழ... மேலும் பார்க்க

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 840 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் ரூ. 9,000 யை எட்டியுள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய... மேலும் பார்க்க