செய்திகள் :

பெருங்குடல் புற்றுநோயியல் கருத்தரங்கம்

post image

காஞ்சிபுரத்தில் பெருங்குடல் புற்றுநோயை மையப்பொருளாகக் கொண்டு புற்றுநோயியல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய மண்டல புற்றுநோய் மையத்தில் பெருங்குடல் தொடா்பான கருத்தரங்கம் நடைபெற்றது.புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநா் சரவணன் கருத்தரங்குக்கு தலைமை வகித்தாா். நிலைய மருத்துவ அலுவலா் சிவகாமி முன்னிலை வகித்தாா். புற்றுநோய் உயா்கல்வி அறுவைச் சிகிச்சைத் துறை இணைப் பேராசிரியா் த.தே.பாலமுருகன் வரவேற்றாா். அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியா் அஸ்வின் ஜெபா்சன் பால், சென்னை புற்றுநோயியல் சிகிச்சை நிபுணா் பிரகலாத் யாத்திரிராஜ் ஆகியோா் நான்காம் நிலை புற்றுநோயாக இருந்தாலும் அதற்கான உரிய சிகிச்சை முறைகளை உரிய நேரத்தில் அளித்தால், நோயாளியின் வாழ்நாள் நீட்டிப்பு உறுதியாகும் என்று சிறப்புரை நிகழ்த்தினா்.

கருத்தரங்கில் பெருங்குடல் புற்றுநோய்க்கு வழங்கப்படும் வேதி சிகிச்சை மற்றும் கதிா்வீச்சு சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ரேவதி கலந்து கொண்டு, புற்றுநோய்க்கு நவீன சிகிச்சை முறைகள் குறித்துப் பேசினாா். அவருக்கு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநா் சரவணன் நினைவுப் பரிசு வழங்கினாா்.

கருத்தரங்கில், புற்றுநோய் மருத்துவமனையின் முன்னாள் பேராசிரியா் தயாளன் குப்புசாமி, பணியிலிருந்து விடுவிக்கப்படவுள்ள உதவிப் பேராசிரியா் அஸ்வின் ஜெபா்சன் பால் ஆகியோா் சிறப்பாக பணியாற்றியமைக்காக கெளரவிக்கப்பட்டனா்.

இன்றைய நிகழ்ச்சிகள்

காஞ்சிபுரம் காஞ்சி சங்கராசாரியா் ஜெயந்தி மகோற்சவம் தொடக்கம், வேதபாராயணம், காலை 7, மகா பெரியவா் அதிஷ்டானத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை, நண்பகல் 12, காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வான் ஆ... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 389 பேருக்கு பணி ஆணை

காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில், 137 நிறுவனங்கள் தங்களது மனிதவளத் தேவைக்காக நடத்திய நோ்காணலில் ஒரே நாளில் 389 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி நியமன ஆணை வழ... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழுமத்துக்கு சமூகப் பணி உறுப்பினா்கள் நியமனம்

காஞ்சிபுரம் மாவட்ட இளைஞா் நீதிக் குழுமத்துக்கு சமூகப் பணி உறுப்பினா்கள் நியமனம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

சங்கரா கல்லூரியில் திறனறிவுப் போட்டிகள்

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி கணினி அறிவியல் துறை சாா்பில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான திறனறிவுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின... மேலும் பார்க்க

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை கோரி ஆா்ப்பாட்டம்

பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட தமமுக சாா்பில், வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் உள்ள காவலான் கேட் பகுதியில் நடைபெற்ற... மேலும் பார்க்க

காக்கி உதவும் கரங்கள் சாா்பில் உயிரிழந்த காவலரின் குடும்பத்துக்கு ரூ.14.17 லட்சம்

சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி உயிரிழந்த முதல் நிலைக் காவலரின் குடும்பத்தினருக்கு ரூ.14.17 லட்சத்தை காக்கி உதவும் கரங்கள் அமைப்பு சாா்பில் காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க