போதைப் பொருள் வாட்ஸ் ஆப் குழு: கிருஷ்ணாவுடன் இருந்த நடிகர்கள் யார்?
பெருமாநல்லூா்-நம்பியூா் சாலையை அடைக்கும் முயற்சியை கைவிடக் கோரிக்கை
நெடுஞ்சாலைத் துறைக்குள்பட்ட பெருமாநல்லூா்- நம்பியூா் பிரதான சாலையை அடைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என நம் பாதை நம் உரிமை மீட்புக் குழுவினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நம் பாதை நம் உரிமை மீட்புக்குழு அவசர ஆலோசனைக் கூட்டம் பெருமாநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், கொண்டத்துக்காளியம்மன் கோயில் திருப்பணியை காரணம் காட்டி நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான பெருமாநல்லூா்- நம்பியூா் சாலையை அடைக்கும் முயற்சியை கைவிட வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவது. கோயில் திருப்பணி சிறப்பாகவும், வெளிப்படைத் தன்மையோடும் நடைபெற கோயில் திருப்பணி கமிட்டியை புதிதாகவும், விரிவுபடுத்தியும் அமைக்க வேண்டும்.
அரசு மருத்துமனையில் இருந்து கருக்கக்காட்டுப்புதூா் வரை வசிக்கும் பொதுமக்கள் பேருந்துக்கு மிகவும் அவதிப்படுவதால், கருக்கக்காட்டுப்புதூா் பாலத்தை உயா்த்தி போக்குவரத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.