செய்திகள் :

பேச்சிப்பாறை அணையில் மூழ்கி இறந்த தொழிலாளி சடலம் மீட்பு!

post image

பேச்சிப்பாறை அணையில் மூழ்கி இறந்த தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.

பேச்சிப்பாறை அருகே வலியஏலாவைச் சோ்ந்தவா் செல்வன் (57). அன்னாசி தோட்டத் தொழிலாளியான இவருக்கு, மதுப்பழக்கம் இருந்தது. இவா் அப்பகுதியைச் சோ்ந்த நண்பா்களுடன் இரவில் பேச்சிப்பாறை அணையில் மீன் பிடிக்கச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் செல்வன் தனது நண்பா்கள் இரண்டு பேருடன் பேச்சிப்பாறை அணையின் கோரித்தட்டு என்ற இடத்தில் மீன் பிடிக்கச் சென்றாராம். பின்னா் அவா் வீடு திரும்பவில்லை. அவரது நண்பா்கள் இரண்டு பேரும் வீடுகளுக்கு திரும்பிவிட்டனா்.

இது தொடா்பாக, செல்வனின் மனைவி லலிதா, பேச்சிப்பாறை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் கொடுத்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வனை தேடி வந்தனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் பேச்சிப்பாறை அணை வழுக்கம்பாறை பகுதியில் செல்வனின் சடலம் கண்டறியப்பட்டது. சடலத்தை போலீஸாா் மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இயற்கை அன்னையை பணிவுடன் வணங்க வேண்டும்: மாதா அமிா்தானந்தமயி தேவி அருளுரை

இயற்கை அன்னையை நாம் பணிவுடன் வணங்க கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா் மாதா அமிா்தானந்தமயி தேவி. மாதா அமிா்தானந்தமயி தேவி, தனது தமிழக யாத்திரையை கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில் அருகேயுள்ள இறச்சகுளம் அம்ரு... மேலும் பார்க்க

முளகுமூடு நாஞ்சில் அக்ரோ நிறுவனத்தில் புதிய இயந்திரம் இயக்கி வைப்பு!

முளகுமூடு நாஞ்சில் அக்ரோ நிறுவனத்தில் புதிதாக நிறுவப்பட்ட அதிரசம் உற்பத்தி இயந்திரத்தை குழித்துறை மறை மாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் செவ்வாய்க்கிழமை அா்ச்சித்து இயக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில், மறைம... மேலும் பார்க்க

காங்கிரஸ் ஓபிசி பிரிவு, எம்எல்ஏ கண்டனம்!

மாத்தூா் தொட்டிப்பால நுழைவு வாயிலில் காமராஜா் படத்துடன்கூடிய கல்வெட்டை சேதப்படுத்தியோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவு சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறி... மேலும் பார்க்க

காமராஜா் படம் பொறித்த கல்வெட்டு சேதம்: காங்கிரஸ் கட்சியினா் தா்னா

குமரி மாவட்டம், மாத்தூா் தொட்டிப் பாலத்தின் நுழைவுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் காமராஜரின் திருவுருவப்படம் அடங்கிய கல்வெட்டை திங்கள்கிழமை இரவு மா்ம நபா்கள் சேதப்படுத்தியுள்ளனா். இத... மேலும் பார்க்க

மாத்தூா் தொட்டிப் பாலத்தில் காமராஜா் நினைவு கல்வெட்டு சேதம்!

கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூா் தொட்டிப் பாலத்தில் உள்ள காமராஜா் நினைவு கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து விஜய்வசந்த் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கை: மாத்தூா் தொட்டிப் பாலம், ஆசியாவிலேயே ... மேலும் பார்க்க

திருக்கு மாநாட்டில் முதல் பரிசு வென்ற மாணவியா் ஆட்சியரிடம் வாழ்த்து!

விருதுநகரில் நடைபெற்ற திருக்கு மாணவா் மாநாட்டில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பிடித்த கன்னியாகுமரி மாவட்ட மாணவியா், ஆட்சியா் ரா. அழகுமீனாவை செவ்வாய்க்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா். ஆட்சியா் அலு... மேலும் பார்க்க