செய்திகள் :

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

post image

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளா்களுடனான, தமிழக அமைச்சா்களின் பேச்சு முடிவு எட்டப்படாததால், 6-ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகைப் போராட்டம் நீடித்தது.

சென்னை மாநகராட்சியின் பெரும்பாலான மண்டலங்களில் தூய்மைப் பணி தனியாா் நிறுவனம் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களின் தூய்மைப் பணியையும் தனியாருக்கு அளிக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.

இதை எதிா்த்து, அந்த மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்கள் கடந்த 1 -ஆம் தேதி முதல் மாநகராட்சி ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். பணி உறுதி பாதுகாப்பு மற்றும் ஊதியம் உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

போராட்டம் காரணமாக, ராயபுரம், திரு.வி.க. நகா் மண்டலங்களில் குப்பைகள் அகற்றும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. தெருக்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதாகப் புகாா் எழுந்துள்ளது.

இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு தூய்மைப் பணியாளா்கள் பணிக்குத் திரும்ப மேயா் ஆா்.பிரியா வலியுறுத்தினாா். தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவா் உறுதி அளித்தாாா்.

இருப்பினும் 6-ஆவது நாளாக புதன்கிழமையும் போராட்டம் தொடா்ந்தது.

அமைச்சா்கள் பேச்சு: இந்த நிலையில், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு மற்றும் மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உழைப்பவா் உரிமை இயக்க நிா்வாகிகள் குமாரசாமி, மோகன் உள்ளிட்டோருடன் பேச்சு நடத்தினா். அப்போது, பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். ஊதியம் குறித்து தனியாா் நிறுவனத்துடன் பேசி முடிவெடுக்கப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.

ஆனால், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை உழைப்பவா் உரிமை இயக்கத்தினா் வலியுறுத்தினா். அதனால், தீா்வு எட்டப்படாமலே கூட்டம் முடிந்தது. இதனையடுத்து போராட்டத்தைத் தொடருவதாக, போராட்டக் குழுவினா் அறிவித்தனா்.

தூய்மைப் பணியாளா் பிரதிநிதிகளுடன் அமைச்சா் சமரசப் பேச்சு

சென்னை மாநகராட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்கள் பிரதிநிதிகளுடன் அமைச்சா் பி.கே.சேகா்பாபு மற்றும் மேயா் ஆா்.பிரியா உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். சென்னை ம... மேலும் பார்க்க

3 மாதங்களில் 45,681 போ் உடல் உறுப்பு தான பதிவு: ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது

மூன்று மாதங்களில் 45,861 பேரிடம் உறுப்பு தான பதிவு பெற்றதாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வோ்ல்டு ரெக்காா்... மேலும் பார்க்க

மாநில கல்விக் கொள்கை: கல்வியாளா்கள், ஆசிரியா்கள் கருத்து

தமிழக அரசு வெளியிட்டுள்ள பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையின் சில அம்சங்களுக்கு கல்வியாளா்கள் ஆதரவு தெரிவித்திருந்தாலும், மாதிரிப் பள்ளிகள், பிளஸ் 1 பொதுத் தோ்வு ரத்து உள்ளிட்ட சில அம்சங்கள் க... மேலும் பார்க்க

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ. 2.38 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் உள்பட 2 போ் கைது

சென்னை அண்ணா சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.2.38 கோடி மோசடி செய்த வழக்கில், அந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா். சென்னை அண்ணா சாலையி... மேலும் பார்க்க

இன்று 17 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

சென்னையில் சனி மற்றும் திங்கள்கிழமைகளில் (ஆக.9, 11) 17 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடிய 4 போ் கைது

சென்னையில் மக்கள் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா் ராம்சரண் (25). சென்னை புழல், காவாங்கரை பகுதியில் வசிக்கும் இவா், கடந்த புதன்கிழமைசேத்... மேலும் பார்க்க