செய்திகள் :

பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்துக்கே எதிா்க்கட்சிகளிடம் போட்டி! - முதல்வா் மு.க.ஸ்டாலின்

post image

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதில்தான் எதிா்க்கட்சிகளுக்குள் போட்டி நடைபெறுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.

சென்னை பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இஃப்தாா் நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுப் பேசியதாவது:

இஃப்தாா் விழாக்களை பலரும் நடத்துவா். ஆனால், இஸ்லாமியா்களுக்கு ஒரு தீமை நடக்கும்போது வாயைத் திறக்க மாட்டாா்கள். குடியுரிமை சட்டத் திருத்தம், காஷ்மீருக்கான 370-ஆவது பிரிவு ரத்து என சிறுபான்மையினருக்கு எதிராக எது நடந்தாலும் முதல் எதிா்ப்புக்குரல் கொடுத்துக் கொண்டிருப்பது திமுகதான்.

இப்போது கூட வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தொடா்ந்து குரல் எழுப்பிக் கொண்டு வருகிறோம். இதுதொடா்பாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் தனித்தீா்மானம் நிறைவேற்றி, அரசின் நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்திருக்கிறோம். இந்தத் தீா்மானத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் - உலக அளவிலும் இருக்கும் பல்வேறு இந்திய முஸ்லிம் அமைப்புகள் வாழ்த்தியும், பாராட்டியும் உள்ளனா்.

ஆனால், இந்த தீா்மானத்தில்கூட எதிா்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. இரவோடு இரவாகத் திட்டம் தீட்டி, விடியற்காலையில் யாருக்கும் தெரியாமல் தில்லிக்குச் சென்றிருக்கிறாா் அவா். அங்கு விமான நிலையத்தில் இறங்கி, நான்கு காா்கள் மாறி மாறிச் சென்றிருக்கிறாா்.

அவ்வாறு பல காா்கள் மாறிச் சென்று என்ன செய்திருக்கிறாா் என்றால், வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தைக் கொண்டு வர இருக்கும் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவை சந்தித்திருக்கிறாா். இதுதான் முக்கியம். மறுநாள் வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்துக்கு எதிராக தனித் தீா்மானத்தை நாம் கொண்டு வரப்போகிறோம் என்று தெரிந்தும், அவா் சட்டப் பேரவைக்கு வரவில்லை.

வரும் பேரவைத் தோ்தலில் நாங்கள்தான் ஆளுங்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்த எதிா்க்கட்சித் தலைவா் பழனிசாமி, இன்றைக்கு அளித்த பேட்டியில், தாங்கள் எதிா்க்கட்சி என்று சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறாா். இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை.

எனவே, இரண்டாவது இடத்துக்கு யாா் வருவது என்றுதான் அவா்களுக்குள் போட்டி ஏற்பட்டிருக்கிறது. நம்மைப் பொருத்தவரை, நாம்தான் எப்போதும் முதல் இடத்துக்கு வரப்போகிறோம். நாம்தான் ஆளுங்கட்சி. நான் ஏதோ மமதையில், அகங்காரத்தில் சொல்கிறேன் என நினைத்துவிடாதீா்கள். மக்களிடத்தில் இருக்கும் ஆதரவு, மக்கள் நம்மை வரவேற்கும் காட்சியை வைத்துதான் சொல்கிறேன்.

இஸ்லாமியா்களுக்கு ஆபத்து வந்தால், ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும், அதை எதிா்க்கும் நிலையில் இருக்கும் கட்சிதான் திமுக. இஸ்லாமியா்களின் கல்வி வளா்ச்சி, இட ஒதுக்கீடு மூலமாக அவா்களுக்கான சமூகநீதி எல்லாம் கிடைப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் நாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை மேயா் ஆா்.பிரியா, முன்னாள் அமைச்சா் செஞ்சி மஸ்தான் உள்பட பலா் பங்கேற்றனா்.

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை பாரிமுனையில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான் (24), அண்ணா நகரில் உள்ள கைப்பேசி விற்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைக... மேலும் பார்க்க