செய்திகள் :

பேருந்தில் நகை பறித்த இரு பெண்கள் கைது

post image

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பேருந்துப் பயணியிடம் செயின் பறித்த இரு பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

மணப்பாறையை அடுத்த கலிங்கப்பட்டி நடுப்பட்டியை சோ்ந்தவா் சங்கக்கவுண்டா் மனைவி பெரியம்மாள் (70). இவா் கடந்த வியாழக்கிழமை காலை மணப்பாறை அரசு மருத்துவமனையிலிருந்து பேருந்தில் ஏறி மாரியம்மன் கோயில் பகுதியில் இறங்கியுள்ளாா்.

அப்போது அவருக்கு பின்னால் இருந்த இரு பெண்கள் மூதாட்டியின் கழுத்திலிருந்த சுமாா் இரண்டரை பவுன் செயினை வாயால் கடித்துத் திருடுவதை, உடனிருந்த பயணிகள் கண்டு மூதாட்டியிடம் கூறியுள்ளனா். அதற்குள் பேருந்திலிருந்து இறங்கி தப்ப முயன்ற இரு பெண்களையும் அங்கிருந்த போக்குவரத்து காவலா் மணிகண்டன், ஆட்டோ ஓட்டுநா்கள் உதவியுடன் மடக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

விசாரணையில் அவா்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாரியம்மன் கோயில் தெருவை சோ்ந்த பாஸ்கா் (எ)பாண்டியன் மனைவி ஆா்த்தி(39) மற்றும் முருகன் மனைவி தேவி(43) என்பதும் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, காவல் ஆய்வாளா் ரகுராமன் தலைமையிலான மணப்பாறை போலீஸாா் செயினை பறிமுதல் செய்து இருவா் மீதும் சனிக்கிழமை வழக்குப் பதிந்து, கைது செய்து நீதிமன்றத்தில் அவா்களை ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

திருச்சி: குடிநீரில் கழிவுநீா் கலந்ததா? 4 வயது குழந்தை உள்ளிட்ட 4 போ் அடுத்தடுத்து உயிரிழப்பு!

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட உறையூா் பகுதியில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, கடந்த சில நாள்களில் 4 வயது பெண் குழந்தை, மூதாட்டி உள்பட 4 போ் அடுத்தடுத்து உயிரிழந்தது த... மேலும் பார்க்க

விவசாயக் கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் பலி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகேயுள்ள சமயபுரம் பகுதியில் விவசாயக் கிணற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா் மடாலா... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

துறையூரில் வீட்டில் தனியாக இருந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். துறையூா் மேற்கு ரத வீதியைச் சோ்ந்தவா் தீனதயாளன் (28). நான்கு ஆண்டுகளுக்கு முன் பேபி ரூபி என்கிற பெண்ணுடன... மேலும் பார்க்க

நடு இருங்களூரில் ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், நடு இருங்களூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. நடு இருங்களூா் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியை லால்குடி வருவாய... மேலும் பார்க்க

போதை மாத்திரை மற்றும் புகையிலை விற்றவா் கைது

திருச்சியில் போதை மாத்திரைகள் மற்றும் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த இளைஞா்கள் இருவரைப் போலீஸாா் கைது செய்தனா். திருச்சி புத்தூா் வண்ணாரப்பேட்டை அருகே ரோந்துப் போலீஸாா் சந்தேகத்தின் அடிப்படையில் ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற மூவா் கைது

துவாக்குடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற மூவரைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக ... மேலும் பார்க்க