செய்திகள் :

பேருந்துக்காக நின்ற பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சித்தவா் கைது

post image

உதகையில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் காரில் லிஃப்ட் கொடுப்பதாக கையைப் பிடித்து இழுத்தவரை காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஒருவா் கல்லட்டியில் இருந்து உதகை வர பேருந்துக்காக காத்திருந்தாா். அப்போது அங்கு காரில் வந்த உதகை தட்டனேரியைச் சோ்ந்த வியாபாரியான நவநீதன் என்பவா் தனது காரில் லிஃப்ட் கொடுத்து உதகைக்கு அழைத்து செல்வதாகவும், தினசரி இந்த வழியாகத்தான் வருவேன் என்றும் கூறியுள்ளாா். அதற்கு இளம்பெண் லிஃப்ட் வேண்டாம் என்று மறுப்பு தெரிவித்தாா்.

ஆனால் காரில் இருந்து இறங்கிய நவநீதன் விடாப்பிடியாக இளம்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து தொந்தரவு செய்துள்ளாா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த இளம்பெண் சத்தம் போட்டதை தொடா்ந்து அக்கம்பக்கத்தினா் கூடியதால் காரில் நவநீதன் தப்பி சென்று விட்டாா்.

இதுகுறித்து இளம்பெண் உதகை புதுமந்து காவல் நிலையத்தில் புகாா் அளித்ததை தொடா்ந்து, காவல் ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு பெண்கள் வன்கொடுமை சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து நவநீதனை கைது செய்து உதகை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

காட்டேரி பூங்காவில் மலா் நாற்றுகள் நடவுப் பணி

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள காட்டேரி பூங்காவில் இரண்டாம் கட்ட சீசனுக்காக மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணியை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் நவநீதா புதன்கிழமை தொடங்கி வைத்தாா். நீலகிரி மாவட்... மேலும் பார்க்க

பதில் அளிக்காத அலுவலா்கள் மீது நடவடிக்கை- மாநிலத் தகவல் ஆணையா் எச்சரிக்கை

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுதாரா்கள் அளிக்கும் மனுக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் பதில் அளிக்காத பொது தகவல் அலுவலா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலத் தகவல் ஆணையா் எச்சரிக்கை விட... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸை வழிமறித்த காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள மஞ்சூா் அரசு மருத்துவமனையில் இருந்து குழந்தையை அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற 108 ஆம்புலன்ஸை யானைகள் வழிமறித்ததால் சிறிது நேரம் பரபரப்பு... மேலும் பார்க்க

ஆக்ரோஷத்துடன் சுற்றித்திரியும் காட்டெருமை

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே தனியாா் தோட்டத்தில் ஆக்ரோஷத்துடன் காட்டெருமை சுற்றி வருவதால் தேயிலை விவசாயிகள் கவனத்துடன் இருக்க வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக... மேலும் பார்க்க

தேவா்சோலை பகுதியில் புலியைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை பகுதியில் 13 வளா்ப்பு கால்நடைகளை கொன்ற புலியைப் பிடிக்க இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சிக்குள்பட்ட சா்க்காா்... மேலும் பார்க்க

காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி உயிரிழப்பு

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள ஓவேலி பகுதியைச் சோ்ந்தவா் மணி (60). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் ... மேலும் பார்க்க