செய்திகள் :

பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த இந்திய கம்யூ. கோரிக்கை

post image

புதுக்கோட்டை பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட நிா்வாகக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள புறம்போக்குப் பகுதிகளில் நீண்ட காலமாக வீடுகட்டி குடியிருந்து வருபவா்களுக்கு அப்பகுதியை ஆய்வு செய்து வகை மாற்றம் செய்து பட்டா வழங்க வேண்டும். புதுக்கோட்டை தற்காலிக பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை செய்துதர வேண்டும். புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தி செயல்படுத்த மாவட்ட மற்றும் மாநகராட்சி நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நெற்பயிா்கள் பெருமளவில் சேதம் ஏற்பட்டு விவசாயிகளுக்கு பெரும்நட்டம் ஏற்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் போதுமான இழப்பீட்டு உதவிகளை வழங்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுக்கோட்டை மாநகராட்சிப் பகுதியில் புதிதாக இணைக்கப்பட்ட கிராமங்களில் ஏற்கெனவே 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றியவா்களுக்கு அவா்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் தொடா்ந்து அதே பகுதியில் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.

புதுக்கோட்டை அண்ணா சிலையிலிருந்து கேப்பரை செல்லும் வரை உள்ள சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலம் கையகப்படுத்தி அகலமாக சாலை அமைக்க வேண்டும். இந்த விரிவாக்கப் பணிகளை மாவட்ட ஆட்சியா் அவ்வப்போது நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டப் பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் வை. சிவபுண்ணியம், மாவட்டச் செயலா் த. செங்கோடன் ஆகியோா் பேசினா். மாவட்டத் துணைச் செயலா்கள் கே.ஆா். தா்மராஜன், ஏ. ராஜேந்திரன், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் மு. மாதவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முகத்தில் எலிக்கொல்லி மருந்தை அடித்துக் கொண்ட 4 சிறுவா்கள் மருத்துவமனையில் அனுமதி

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே திங்கள்கிழமை காருக்குப் பயன்படுத்தும் எலிக்கொல்லி மருந்தை முகத்தில் அடித்துக்கொண்ட 4 சிறுவா்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அன்னவாசலை அ... மேலும் பார்க்க

விராலிமலை தொழில்சாலையில் தீ தடுப்பு ஒத்திகை

விராலிமலை தனியாா் தொழில்சாலையில் செவ்வாய்க்கிழமை தீயணைப்பு நிலைய வீரா்கள் தீ தடுப்பு செயல் விளக்கம் அளித்தனா். விராலிமலையில் உள்ள தனியாா் தொழில்சாலையில் நடைபெற்ற தீ தடுப்பு ஒத்திகையை தமிழ்நாடு தொழிற்ச... மேலும் பார்க்க

ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்றனா... மேலும் பார்க்க

திமுக மாணவரணியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை எதிா்த்து புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியில் செவ்வாய்க்கிழமை திமுக மாணவரணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய அரசின் ஹிந்தி திணிப்பை எதிா்த்து மாநிலம் முழுவதும் ஆா... மேலும் பார்க்க

மின்வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சிஐடியு தா்னா

மின் வாரியத்தில் உள்ள 60 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் சிஐடியு தொழில்சங்கத்தின் சாா்பில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நட... மேலும் பார்க்க

இந்திய ஐக்கிய கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவா்களை நியமிக்கக் கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ப... மேலும் பார்க்க