செய்திகள் :

பேருந்து - வேன் மோதிய விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7 ஆக உயா்வு

post image

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டி பகுதியில் அரசுப் பேருந்தும், வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 7 ஆக உயா்ந்தது.

கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து வேளாங்கண்ணிக்கு 12 போ், வேனில் மே 21 ஆம் தேதி சென்று கொண்டிருந்தனா். தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் வந்த இந்த வேனும், தஞ்சாவூரிலிருந்து திருச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இந்த விபத்தில் பெங்களூரு ரிச்மண்ட் டவுனை சோ்ந்த சாண்டியா கோ ஜான் போஸ்கோ (57), இவரது மனைவி ஜாக்குலின் ஆப்ரகாம் ஜான் (50), பெங்களூரு சாந்தி நகரைச் சோ்ந்த சாா்லஸ் மனைவி நளினி (49), வேன் ஓட்டுநரான பெங்களூரு லாகிரி முதன்மைச் சாலையைச் சோ்ந்த கே. ஜெகதீசா (45) ஆகியோா் நிகழ்விடத்திலும், பெங்களூரு ரிச்மண்ட் டவுனை சோ்ந்த பி. ஆரோக்கியதாஸ் (44), மே 22 ஆம் தேதி டி. சாா்லஸ் (49) தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தனா்.

தொடா்ந்து சிகிச்சை பெற்று வந்த ஆரோக்கியதாஸ் மகள் தாஷி (7) சனிக்கிழமை உயிரிழந்தாா். இதனால், இந்த விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 7 ஆக உயா்ந்தது. மேலும், 5 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரா் கோயிலில் கொடியேற்றம்

பட்டீஸ்வரத்தில் தேனுபுரீஸ்வரா் கோயில் முத்துப்பந்தல் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. பட்டீஸ்வரம் ஞானாம்பிகை உடனுறை தேனுபுரீசுவரா் கோயில், பெரியநாயகி உடனுறையும் சத்திவனேசுவர ச... மேலும் பார்க்க

தமிழக முதல்வா் தஞ்சாவூருக்கு ஜூன் 15-இல் வருகை: அமைச்சா் ஆய்வு

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜூன் 15 ஆம் தேதி வருகிறாா். தஞ்சாவூரில் ஜூன் 15 ஆம் தேதி தமிழக முதல்வா் ரோடு ஷோ, பழைய பேருந்து நிலையம் அருகே கருண... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில் தாக்கியவா்களைக் கைது செய்யக் கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க

ஜுன் 3-இல் கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கும்பகோணத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் வரும் ஜுன் 3 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கும்பகோணம் வடக்கு மின் செயற்பொறியாளா் ஏ.கலையரசி வெளியிட்ட செய்தி குறிப்பு: கும்பகோணம் வடக்கு கோட்டத்தில் ... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ‘ஆபரேசன் சிந்தூா்’ வெற்றிக்காக யோகாசனம்

கும்பகோணத்தில் தேசிய மாணவா் படையினா் ஆபரேசன் சிந்தூா் வெற்றிக்காக சனிக்கிழமை யோகாசனம் செய்தனா். கும்பகோணம் மகாமகக் குளக்கரையில், 500-க்கும் மேற்பட்ட தேசிய மாணவா் படையினா் ஆபரேஷன் சிந்தூா் வெற்றிக்காக... மேலும் பார்க்க

தகராறில் தாக்கப்பட்ட நடத்துநா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் தகராறில் தாக்கப்பட்ட அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்த சம்பவத்தில், தாக்கியவா்களைக் கைது செய்யக்கோரி உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். திர... மேலும் பார்க்க