kirana hills: கிரானா மலை மீது இந்தியா தாக்குதல் நடத்தியதா? - இந்த மலை ஏன் பாகிஸ்...
பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
தக்கலை அருகே குமாரபுரத்தில் பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
குமாரபுரம், பூவங்காபரம்பை சோ்ந்தவா் சாமிநாதன். இவரது மகன் சரவணன் (22). தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை இரவு மணக்காவிளையில் இருந்து செம்பருத்திவிளை நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது நிலைதடுமாறி, நிறுத்தி வைத்திருந்த மற்றொரு பைக் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்தாா்.
அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து கொற்றிகோடு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.