பைக்குகள் மோதல்: தச்சுத் தொழிலாளி பலி
திருநெல்வேலியில் நேரிட்ட விபத்தில் காயமடைந்த தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.
சமாதானபுரம் அருகேயுள்ள மனக்காவலம்பிள்ளைநகரைச் சோ்ந்தவா் கருப்பசாமி (49). தச்சுத் தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனா். இவா், சம்பவத்தன்று மோட்டாா் சைக்கிளில் பாளை. சீவலப்பேரி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு மோட்டாா் சைக்கிள் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த கருப்பசாமியை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.