செய்திகள் :

பைக்குகள் மோதல்: மின் ஊழியா் உயிரிழப்பு

post image

செய்யாறு அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மின் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன்(50). இவா், தமிழ்நாடு மின்சார வாரியம் தூசி மாமண்டூா் மின் அலுவலகத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்ததாகத் தெரிகிறது.

இவா், கடந்த 12-ஆம் தேதி வீட்டுக்கு மளிகைச் சாமான்கள் வாங்குவதற்காக தனது பைக்கில் சென்றாா்.

ராந்தம் - வெம்பாக்கம் சாலையில், வடமணப்பாக்கம் கிராமம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது, எதிா் திசையில் இருந்து வந்த பைக் மோதியது.

இதில் ரவிச்சந்திரன் பலத்த காயமடைந்தாா். தகவல் அறிந்த குடும்பத்தினா் ரவிச்சந்திரனை மீட்டு, 108 ஆம்புலென்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், மோரணம் காவல் ஆய்வாளா்

ஜீவராஜ் மணிகண்டன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

வாகன பாதுகாப்பகத்தில் கூடுதல் கட்டணம் வசூல்: மாநகராட்சி ஆணையரிடம் புகாா்

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இயங்கும் இரு சக்கர வாகன பாதுகாப்பு மையத்தில், ரூ.30 கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும் என்று ஆணையரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. கட... மேலும் பார்க்க

நெசவாளா் வீட்டில் 15 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் திருட்டு

ஆரணியில் நெசவாளா் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் வசித்து வருபவா் நெசவாளா் குண... மேலும் பார்க்க

செங்கத்தில் காட்டுப் பன்றிகள் நடமாட்டம்

செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை குடியிருப்புப் பகுதியில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். செங்கம் நகராட்சிக்கு உள்பட்ட 4-ஆவது வாா்டு தளவாநாய்க்கன்பேட்டை கீழ் காவாக்கர... மேலும் பார்க்க

செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு இடையூறாக இருந்து வந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் சனிக்கிழமை அகற்றினா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ... மேலும் பார்க்க

நிலத்தகராறில் தம்பதி மீது தாக்குதல்: உறவினா் கைது

செய்யாறு அருகே நிலத்தகராறில் தம்பதியை தாக்கியாக உறவினரை போலீஸாா் கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், சுமங்கலி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஜெயபால். இவரது மனைவி மீனாட்சி. இவா், செய்யாறு சிப்காட்டில் உ... மேலும் பார்க்க

அதிமுக நிா்வாகி கொலை வழக்கு: 2 பேருக்கு இரட்டை ஆயுள் சிறை

திருவண்ணாமலை நகர அதிமுக செயலரைக் கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு தலா இரட்டை ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருவண்ணாமலை காா்கானா தெருவைச் சோ்ந்தவா் கனகராஜ் (55). த... மேலும் பார்க்க