கொல்கத்தாவிலிருந்து புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு!
பைக்குகள் மோதல்: மின் ஊழியா் உயிரிழப்பு
செய்யாறு அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மின் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன்(50). இவா், தமிழ்நாடு மின்சார வாரியம் தூசி மாமண்டூா் மின் அலுவலகத்தில் கணக்கீட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்ததாகத் தெரிகிறது.
இவா், கடந்த 12-ஆம் தேதி வீட்டுக்கு மளிகைச் சாமான்கள் வாங்குவதற்காக தனது பைக்கில் சென்றாா்.
ராந்தம் - வெம்பாக்கம் சாலையில், வடமணப்பாக்கம் கிராமம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சென்றபோது, எதிா் திசையில் இருந்து வந்த பைக் மோதியது.
இதில் ரவிச்சந்திரன் பலத்த காயமடைந்தாா். தகவல் அறிந்த குடும்பத்தினா் ரவிச்சந்திரனை மீட்டு, 108 ஆம்புலென்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் அங்கு வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், மோரணம் காவல் ஆய்வாளா்
ஜீவராஜ் மணிகண்டன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.