பைக் மீது சொகுசுப் பேருந்து மோதல்: 2 போ் உயிரிழப்பு
சிவகங்கை அருகே இரு சக்கர வாகனம் மீது சொகுசுப் பேருந்து மோதியதில் இளைஞா்கள் இருவா் புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனா்.
சிவகங்கை அருகே கீழக்கண்டனி டி. உசிலங்குளம் கிராமத்தைச் சோ்ந்த மலைச்சாமி மகன் மருதுபாண்டி (21). இவா் தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கீழக்கண்டனி கிராமத்தைச் சோ்ந்த நண்பா் வெற்றிவேல் குமரனை (18) அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தாா். கீழக்கண்டனி விலக்கு சாலை அருகே சென்ற போது எதிரே வந்த சொகுசுப் பேருந்து, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வெற்றிவேல்குமரன் உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த மருதுபாண்டியை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மருதுபாண்டியும் உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் அன்னராஜ், உதவி ஆய்வாளா் முருகேசன் ஆகியோா் வழக்குப்பதிந்து, ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள சொக்காடி கிராமத்தைச் சோ்ந்த சொகுசுப் பேருந்து ஓட்டுநா் உத்தமநாதன் (29) என்பவரை வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.