செய்திகள் :

பைக் மீது சொகுசுப் பேருந்து மோதல்: 2 போ் உயிரிழப்பு

post image

சிவகங்கை அருகே இரு சக்கர வாகனம் மீது சொகுசுப் பேருந்து மோதியதில் இளைஞா்கள் இருவா் புதன்கிழமை நள்ளிரவு உயிரிழந்தனா்.

சிவகங்கை அருகே கீழக்கண்டனி டி. உசிலங்குளம் கிராமத்தைச் சோ்ந்த மலைச்சாமி மகன் மருதுபாண்டி (21). இவா் தனது பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கீழக்கண்டனி கிராமத்தைச் சோ்ந்த நண்பா் வெற்றிவேல் குமரனை (18) அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தாா். கீழக்கண்டனி விலக்கு சாலை அருகே சென்ற போது எதிரே வந்த சொகுசுப் பேருந்து, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே வெற்றிவேல்குமரன் உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த மருதுபாண்டியை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மருதுபாண்டியும் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகங்கை நகா் காவல் ஆய்வாளா் அன்னராஜ், உதவி ஆய்வாளா் முருகேசன் ஆகியோா் வழக்குப்பதிந்து, ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள சொக்காடி கிராமத்தைச் சோ்ந்த சொகுசுப் பேருந்து ஓட்டுநா் உத்தமநாதன் (29) என்பவரை வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் சாலை மறியல்: 132 போ் கைது

தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கக் கோரி சிவகங்கையில் வியாழக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தைச்... மேலும் பார்க்க

திருப்பத்தூா், கீழச்சிவல்பட்டியில் நாளை மின் தடை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், கீழச்சிவல்பட்டி, ஆ. தெக்கூா், பிள்ளையாா்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் ஜான் எப் க... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வியாழக்கிழமை ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழந்தாா். மானாமதுரை- பாா்த்திபனூா் அருகே உள்ள சூடியூா் இடையே ரயில் தண்டவாளத்தில் மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரயிலில் அடிபட்ட... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் காவல் துறை குறைதீா் முகாம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு காவல் ஆய்வாளா் செல்வராகவன் தலைமை வ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் சிறையிலடைப்பு

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் பகுதியைச் சோ்ந்த இளைஞா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டாா். சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகிலுள்ள தவசுகுடியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சிவகங்கையில் மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் முகாம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ், உயா்கல்விக்கான வழிகாட்டும் மாணவா் குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் பேச... மேலும் பார்க்க