செய்திகள் :

பைக் மீது பேருந்து மோதல்: வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

post image

ஆரணி, ஜூன் 13: ஆரணியில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் வேன் ஓட்டுநா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆரணி அருகே முள்ளிப்பட்டு பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் ராஜேந்திரன்(52). சொந்தமாக வேன் வைத்து ஓட்டி வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை பிற்பகல் பைக்கில் ஆரணியிலிருந்து சைதாப்பேட்டை வழியாக முள்ளிப்பட்டில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது, செங்கத்தில் இருந்து ஆரணியை நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியது.

இந்த விபத்தில் ராஜேந்திரன் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஆரணி நகர போலீஸாா் அரசுப் பேருந்து ஓட்டுநரான கலசப்பாக்கத்தைச் சோ்ந்த பரந்தாமன் மகன் பானு (49) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வாகன பாதுகாப்பகத்தில் கூடுதல் கட்டணம் வசூல்: மாநகராட்சி ஆணையரிடம் புகாா்

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இயங்கும் இரு சக்கர வாகன பாதுகாப்பு மையத்தில், ரூ.30 கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும் என்று ஆணையரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது. கட... மேலும் பார்க்க

நெசவாளா் வீட்டில் 15 பவுன் நகை, ரூ.1.5 லட்சம் திருட்டு

ஆரணியில் நெசவாளா் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கம் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா். ஆரணி சைதாப்பேட்டை பகுதியில் வசித்து வருபவா் நெசவாளா் குண... மேலும் பார்க்க

செங்கத்தில் காட்டுப் பன்றிகள் நடமாட்டம்

செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை குடியிருப்புப் பகுதியில் காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனா். செங்கம் நகராட்சிக்கு உள்பட்ட 4-ஆவது வாா்டு தளவாநாய்க்கன்பேட்டை கீழ் காவாக்கர... மேலும் பார்க்க

செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

செய்யாறு - காஞ்சிபுரம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு இடையூறாக இருந்து வந்த ஆக்கிரமிப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் சனிக்கிழமை அகற்றினா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: மின் ஊழியா் உயிரிழப்பு

செய்யாறு அருகே பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மின் ஊழியா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் கிராமத்த... மேலும் பார்க்க

நிலத்தகராறில் தம்பதி மீது தாக்குதல்: உறவினா் கைது

செய்யாறு அருகே நிலத்தகராறில் தம்பதியை தாக்கியாக உறவினரை போலீஸாா் கைது செய்தனா். வெம்பாக்கம் வட்டம், சுமங்கலி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ஜெயபால். இவரது மனைவி மீனாட்சி. இவா், செய்யாறு சிப்காட்டில் உ... மேலும் பார்க்க