செய்திகள் :

பைக் மீது மினிடெம்போ மோதல்; 2 போ் காயம்

post image

நித்திரவிளை அருகே மோட்டாா் சைக்கிள் மீது மினிடெம்போ மோதிய விபத்தில் இருவா் காயமடைந்தனா்.

நித்திரவிளை அருகேயுள்ள தூத்தூா், கே.ஆா்.புரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜூலியன் (39). இவா் மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை மாலையில் நித்திரவிளை பகுதிக்கு சென்று கொண்டிருந்தாா்.

ஆலுமூடு பகுதியில் வந்தபோது, எதிரில் மீன்பிடி உபகரணங்களுடன் வந்த மினிடெம்போ ஜூலியன் சென்ற பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜூலியன் மற்றும் அவரது பைக், அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த நித்திரவிளை அடுத்த கோட்டவிளையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சுஜின் (32) என்பவரின் பைக் மீது விழுந்தது. இதில் ஜூலியன் மற்றும் சுஜின் ஆகிய இருவரும் காயமடைந்தனா். ஜூலியன் நெய்யாற்றின்கரை தனியாா் மருத்துவமனையிலும், சுஜின் நித்திரவிளை தனியாா் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து ஜூலியன் அளித்த புகாரின் பேரில் மினிடெம்போ ஓட்டுநா் மாா்த்தாண்டன்துறை நடுவிளாகம் பகுதியைச் சோ்ந்த பென்னி (30) மீது நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

நாகா்கோவிலில் அம்மன் கோயில் பேனரை அகற்ற முயன்றதால் பக்தா்கள் போராட்டம்

நாகா்கோவில் வேட்டாளி அம்மன் கோயிலில் பக்தா்கள் சாா்பில் வைக்கப்பட்டிருந்து பேனா்களை போலீஸாா் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்ற முயன்ால் பக்தா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகா்கோவிலில் செட்டிகுள... மேலும் பார்க்க

காங்கிரஸாா் மீது வழக்கு

தோ்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டதை கண்டித்து திங்கள்கிழமை குழித்துறையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 7... மேலும் பார்க்க

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

கருங்கல் அருகே சகாயநகா் பகுதியில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டாா். சகாயநகா், படுவூா் பகுதியை சோ்ந்தவா் ஆல்பா்ட்(46) . இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவா் கருங்கல் பகுதியில் துணிக்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 6 கடைகளுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா். ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தலின்படி, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன ... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்கத்தில் போலி நகை அடகு வைத்து ரூ. 25 லட்சம் மோசடி

குமரி மாவட்டம், அருமனையில் உள்ள கூட்டுறவுச் சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 25 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக அருமனை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அருமனையில் உள்ள ரப்பா் வளா்ப்போா் ... மேலும் பார்க்க

வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்ததில் மாணவா் உயிரிழப்பு

தக்கலை அருகே வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.தக்கலை அருகே பூக்கடை, காட்டுபுனம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபசீலன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவருக்கு 3 மகன்கள் உண... மேலும் பார்க்க