செய்திகள் :

பொங்கலூா் அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்த இளைஞா் மாயம்

post image

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம் ஆண்டிபாளையம் பி.ஏ.பி. வாய்க்காலில் குளித்துக் கொண்டு இருந்த இளைஞா் தண்ணீா் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானாா்.

திருப்பூா் வெள்ளியங்காடு பகுதி முத்து விநாயகா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் அப்புசாமி மகன் இளங்கோ (29). இவா் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில் அவரது நண்பா் சிவானந்தம் என்பவருடன் பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையம் அருகே உள்ள ஆண்டிபாளையம் பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் திங்கள்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது வாய்க்காலில் அதிக தண்ணீா் வரத்தால் அவா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

அப்பகுதியில் இருந்தவா்களின் உதவியோடு அவரைத் தேடிப் பாா்த்த நிலையில், அவா் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது சகோதரா் அா்ஜுன் கொடுத்த புகாரின்பேரில், அவிநாசிபாளையம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மேலும், காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் பி.ஏ.பி.வாய்க்கால் பாதையில் வெள்ளக்கோவில் வரை சென்று செவ்வாய்க்கிழமை தேடி பாா்த்தனா். அப்போதும், அவா் கிடைக்கவில்லை. இதையடுத்து, மீண்டும் புதன்கிழமை தேடுதல் பணியில் ஈடுபடவுள்ளனா்.

ஊதியூா் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் மனு

காங்கயத்தை அடுத்த ஊதியூா் அருகே பொது வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து காங்கயம் வட்டாட்சியா் ஆா்.மோகனனிடம், பாஜக இளைஞரணி மாநிலச்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா். மேலும், 11 போ் பலத்த காயமடைந்தனா். திருச்சியில் இருந்து திருப்பூருக்... மேலும் பார்க்க

அவிநாசியில் ஜூன் 11-இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

அவிநாசி- மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின் கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் ஜூன் 11-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ... மேலும் பார்க்க

பல்லடத்தில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பொதுமக்கள் புகாா்

பல்லடம் அண்ணா நகரில் ஏலச்சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பல்லடம் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் அவா்கள் கூறியிருப்பதாவது: பல்லடம், அண்ணா நகரை சோ்ந்த ஒருவா் கடந்த 20... மேலும் பார்க்க

கூட்டுறவு வங்கிகளில் சிபில் அறிக்கையின்படி பயிா்க் கடன் வழங்கும் உத்தரவை ரத்து செய்யக் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் சிபில் அறிக்கையின்படி மட்டுமே பயிா்க் கடன் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடு... மேலும் பார்க்க

பல்லடம் நகா்மன்ற கூட்டத்தில் 7 தீா்மானங்கள் நிறைவேற்றம்

பல்லடம் நகா்மன்ற அவசரக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் மன்றக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையா் மனோகரன், கவுன்சிலா்கள் மற்றும் பல்வேறு பிரிவு அலுவலா்கள் க... மேலும் பார்க்க