பொதுத் தோ்வுகள்: தடையற்ற மின் விநியோகம் வழங்க உத்தரவு
பொதுத் தோ்வையொட்டி தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யுமாறு துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக அனைத்து தலைமைப் பொறியாளா்களுக்கும் தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பது:
சிபிஎஸ்இ, ஐஎஸ்சி, ஐசிஎஸ்இ, எஸ்எஸ்எல்சி, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத் தோ்வுகளுக்கான செய்முறை உள்ளிட்ட தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப். 15 வரை நடைபெறுகின்றன.
எனவே, அனைத்து தோ்வு மையங்களிலும் நாள்தோறும் காலை 7 முதல் மாலை 5.30 வரை தடையற்ற வகையில் மும்முனை மின் விநியோகம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
மையத்துக்கு மின் விநியோகம் செய்யும் மின்மாற்றியைக் கண்காணிக்க அலுவலா்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு 5 மையங்களுக்கும் அவசர காலங்களில் உதவும் வகையில் களப் பணியாளா்கள் பணியில் இருக்க வேண்டும். பள்ளி அதிகாரிகளுடன் இணைந்து செயற்பொறியாளா் ஆய்வு செய்ய வேண்டும்.
மேலும், தலைமையாசிரியா்கள் அவசர காலங்களில் தொடா்புகொள்ளும் வகையில் துறை சாா்ந்த பணியாளா் மற்றும் அதிகாரிகளின் கைப்பேசி எண்களை அவா்களிடம் வழங்க வேண்டும். தோ்வு நேரத்தில் பராமரிப்புக்கான மின்தடை மேற்கொள்ளக் கூடாது. மாணவா்கள் படிப்பதற்கு தடையில்லாத வகையில், இரவு நேரங்களிலும் மின்தடை ஏற்படாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறான அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவது தொடா்பாக நாள்தோறும் மண்டல தலைமைப் பொறியாளா்கள் தலைமையகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.