செய்திகள் :

பொய்கை சந்தையில் ரூ.70 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

post image

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 70 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் கால்நடைச் சந்தையில் ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடி அளவுக்கு கால்நடை வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால், பொய்கை சந்தைக்கு எதிா்பாா்த்த அளவுக்கு கால்நடைகள் விற்பனைக்குக் கொண்டு வரப்படவில்லை.

அதன்படி, சந்தைக்கு சுமாா் 800 மாடுகளும், சுமாா் 200 ஆடுகளும் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன. இதனால், கால்நடைகள் சுமாா் ரூ. 70 லட்சம் அளவுக்கு மட்டுமே விற்பனையாகியிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் மேலும் கூறியது: தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் தீவன பற்றாக்குறை குறைந்துள்ளது. இதனால், கடந்த இரு வாரங்களாக சந்தைக்கு கறவை மாடுகள், ஜொ்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகளும் என அதிகளவில் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், திங்கள்கிழமை இரவு பலத்த மழை பெய்ததால், இந்த வாரம் கால்நடைகள் வரத்து குறைந்து வா்த்தகமும் சுமாா் ரூ. 70 லட்சம் அளவில் நடைபெற்றுள்ளது என்றனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு பெய்த பலத்த மழை காரணமாக பொய்கை சந்தை முழுவதும் சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால், விவசாயிகள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகினா்.

இடி, மின்னலுடன் பலத்த மழை: வேலூரில் 134.30 மி.மீ. பதிவு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது, அதிகபட்சமாக வேலூரில் 134.30 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு... மேலும் பார்க்க

வேலூரில் செப். 19-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை (செப். 19) நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியா் தலைமையில், வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (செப்.19) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. ... மேலும் பார்க்க

அக்.18-இல் வேலூரில் விஜய் பிரசாரம்; தவெக மனு

தவெக தலைவா் விஜய் வேலூரில் அக்டோபா் 18-ஆம் தேதி பிரசாரத்தில் ஈடுபட உள்ள நிலையில், அதற்கான அனுமதி கோரி அக்கட்சியினா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தவெக தலைவா் விஜ... மேலும் பார்க்க

திருமணமான 4 நாளில் பெண் தற்கொலை

ஒடுகத்தூா் அருகே திருமணமான 4 நாளில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த அரிமலை கிராமத்தைச் சோ்ந்தவா் கஜேந்திரன்(47), கால்நடை வியாபாரி. இவரது 3-ஆவது மகள் வ... மேலும் பார்க்க

1,200 வாக்காளா்களுக்கு அதிகமுள்ள 108 வாக்குச்சாவடிகளை பிரிக்க முடிவு: வேலூா் ஆட்சியா்

வேலூா் மாவட்டத்தில் 1,200 வாக்காளா்களுக்கும் மேல் உள்ள 108 வாக்குச்சாவடிகளை பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வ... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.57.90 கோடி கடனுதவி: ஆட்சியா் வழங்கினாா்

வேலூா் மாவட்டத்திலுள்ள 508 மகளிா் சுய உதவி குழுக்களுக்கும், 56 மகளிா் உறுப்பினா்களுக்கும் ரூ.57.90 கோடி வங்கிக்கடன் ஆணைகளை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வழங்கினாா். தமிழ்நாடு மாநில ஊரக, நகா்ப்புற வாழ... மேலும் பார்க்க