இஸ்ரேலின் `அந்த’ இரு நோக்கமும் நிறைவேறியதா? - போர் நிறுத்தமும் விளைவுகளும்! | கள...
பொறியியல் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து
கரூா் அருகே பொறியியல் பணிகள் நடைபெறுவதால் கோவை ரயில்கள் ஜூன் 28, 30-ஆம் தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கரூா் அருகே மூா்த்திபாளையத்தில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், திருச்சியில் இருந்து ஜூன் 28 மற்றும் 30 -ஆம் தேதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் புறப்படும் திருச்சி - பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) திருச்சி - கரூா் இடையே மட்டும் இயக்கப்படும். கரூா் - பாலக்காடு இடையே முன்பதிவில்லா ரயில் இயக்கப்படும்.
இதேபோல, நாகா்கோவில் - கோவை ரயில் (எண்: 16321) ஜூன் 28 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நாகா்கோவில் - கரூா் இடையே மட்டும் இயக்கப்படும்.
கரூா் - கோவை இடையே முன்பதிவில்லா ரயில் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.