செய்திகள் :

'பொறுப்பான பேச்சுவார்த்தை; அடுத்த வாரம் சுமூக முடிவு!' - ட்ரம்ப் பதிவு - இறங்கி வருகிறதா ஹார்வார்டு?

post image

'அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராக உங்கள் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஈடுபடுகிறார்கள். அவர்களின் தகவல்களை அரசிடம் கொடுங்கள்' என்று ஹார்வார்டு பல்கலைக்கழகத்திடன் கேட்டது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசு.

'அது எங்களது மாணவர்களின் தனிப்பட்ட தரவுகள்' என்று ஹார்வார்டு பல்கலைக்கழகம் மறுக்க, நிதி நிறுத்தத்தைக் காட்டி பயமுறுத்தியது அமெரிக்க அரசு. இதற்கும் பல்கலைக்கழகம் பயப்படாததால், அதற்குச் செல்ல வேண்டிய 2.2 பில்லியன் டாலர் மானியத்தையும், 60 மில்லியன் டாலர் மதிப்புள்ள அரசு ஒப்பந்தம் நிறுத்தப்பட்டது.

ஹார்வார்டு பல்கலைக்கழகம்
ஹார்வார்டு பல்கலைக்கழகம்

அப்போதும் அசரவில்லை ஹார்வார்டு பல்கலைக்கழகம். இதனால், அந்தப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் இனி சேர முடியாது. இறுதி ஆண்டை முடிக்கும் வெளிநாட்டு மாணவர்களைத் தவிர, பிற வெளிநாட்டு மாணவர்கள் வேறு பல்கலைக்கழகத்தில் சேர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

ஆனால், எதற்குமே பல்கலைக்கழகம் அசைந்துக் கொடுக்கவில்லை.

அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பு

இந்த நிலையில், நேற்று வந்த தீர்ப்பில், 'ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர முடியாது என்கிற ட்ரம்ப் அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேலும், வெளிநாட்டு மாணவர்கள் தொடர்ந்து படிக்கலாம்' என்று உத்தரவிட்டுள்ளது அமெரிக்க நீதிமன்றம்.

ட்ரம்ப்
ட்ரம்ப்

ட்ரம்ப் பதிவு கூறுவது என்ன?

இன்னொரு பக்கம், ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், "ஹார்டுவார்டு பல்கலைக்கழகத்தோடு அரசுக்கு இருந்த பிரச்னை என்ன ஆனது என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். நாங்களும், ஹார்வார்டு பல்கலைக்கழகமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அநேகமாக அடுத்த வாரம், அதன் முடிவு அறிவிக்கப்படும்.

ஹார்வார்டு பல்கலைக்கழகம் பொறுப்புணர்வோடு பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டு வருகிறது. மேலும், அவர்கள் சரியானதை செய்ய ஆர்வமாக இருப்பதுப்போல தெரிகிறது. இதே மாதிரியான சுமூக சூழல் நிலவினால், முடிவு வரலாற்றுச் சிறப்புமிக்கதாகவும், நாட்டிற்கு நன்மையானதாகவும் அமையும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்பு, ட்ரம்ப் அரசு கொடுத்த அனைத்து நெருக்கடிகளையும் தாங்கிய ஹார்வார்டு பல்கலைக்கழகம், ட்ரம்பின் இந்தப் பதிவால் இப்போது அடிப்பணிகிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆனால், ட்ரம்ப் பேசும் பலவும் நடந்ததில்லை என்பதால் ஹார்வார்டு பல்கலைக்கழகம் பதில் அளித்தால் மட்டுமே உண்மை தெளிவாகும்.

ஈரான் vs இஸ்ரேல்: 'நம் குரலை இழந்துவிட்டோமா?' - இந்திய அரசைக் கேள்வி கேட்கும் சோனியா காந்தி!

ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல் வலுபெற்று வருகிறது. இந்த விவகாரத்தில் இந்தியா மௌனமாக இருப்பது வெளியுறவு செயல்பாடுகளின் தவறைக் காட்டுவதாகவும், இந்தியாவின் தார்மீக மற்றும் போர்த்திறம்சார்ந்த மரபுக்கு முட... மேலும் பார்க்க

ப்ளூடூத் எடை இயந்திரம்: ரேஷன் கடையில் தாமதமாகும் பொருள் விநியோகம்; மக்கள் கோபம் - கவனிக்குமா அரசு?

அந்தக் காலம், இந்தக் காலம்... எந்தக் காலமாக இருந்தாலும், ரேஷன் கடை என்றதும் நம் கண்முன்னே வந்து நிற்பது, 'வரிசை... கூட்டம்'. 'அதிக வெயில் இல்லாத நேரத்திலும், கூட்டம் அதிகமாக இல்லாமல் இருக்கும் நேரத்தி... மேலும் பார்க்க

மதிமுக: "வேறு கட்சியுடன் சேரும் அவசியம் தற்போது இல்லை" - திமுக கூட்டணி குறித்து வைகோ சொல்வது என்ன?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “அமித்ஷாவின் உளறல்களுக்கு எல்லையே இல்லை. ஆங்கிலம் உலக மொழி. ஆங்கிலம் தெரிந்தால் உலகில் பல நாடுக... மேலும் பார்க்க

நீதிபதி வீட்டில் சிக்கிய பணம்; 'அமித் ஷாவிடம் முதலில் தகவலை சொன்ன டெல்லி காவல்துறை’ - வெளியான தகவல்

கடந்த மார்ச் மாதம், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீயணைப்பு முடிந்ததும், தீயணைப்பு வீரர்கள் அவரது வீட்டில் கட்டு கட்டான பாதி எரிந்த பணத்தைக் கண்டுபி... மேலும் பார்க்க

`திமுக மீது மக்கள் கொதிப்பில் இருக்கிறார்கள்; 2026 தேர்தலில் பரிசு...' - எடப்பாடி பழனிசாமி பாய்ச்சல்

அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து நான் ஏற்கெனவே வி... மேலும் பார்க்க