செய்திகள் :

பொள்ளாச்சி விவகாரம்: பேரவைத் தலைவரிடம் ஆதாரங்களைச் சமர்பித்த திமுக, அதிமுகவினர்!

post image

தமிழக சட்டசபையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டத்தொடரின் கடைசி நாள் இன்று தொடங்கிய நிலையில்ம் நிலையில், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பான ஆதாரங்களை பேரவைத் தலைவரிடம் திமுக, அதிமுகவினர் இன்று வழங்கியுள்ளனர்.

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் மற்றும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி இடையே நேற்று கடுமையான விவாதம் நடைபெற்றது.

இந்த விவாதத்தில், “பொள்ளாச்சி சம்பவத்தில் புகாா் கொடுத்தும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. 12 நாள்களுக்குப் பிறகுதான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனா். இடைப்பட்ட நாள்களில் என்ன நடந்தது? யாரைக் காப்பாற்றுவதற்காக அப்படிச் செய்தீா்கள்? ஆனால், அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் புகாா் கொடுத்த உடனே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளாா்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படிக்க | பொள்ளாச்சி சம்பவம் அதிமுகவினரால் நடத்தப்பட்டது: முதல்வர் ஸ்டாலின்

அதற்கு பதிலளித்த எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிச்சாமி, “பொள்ளாச்சி சம்பவத்தில் முதல்வா் தவறான தகவல் தருகிறாா். குற்றவாளிகள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனா்” எனக் கூறினார்.

அதை முதல்வர் மறுக்கவே இருவருக்கும் தொடர்ந்து இதுகுறித்து விவாதம் நடைபெற்றது.

இறுதியாக, பொள்ளாச்சி சம்பவத்தில்12 நாள்களுக்குப் பிறகே முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்பதற்கான ஆதாரத்தை பேரவைத் தலைவரிடம் சனிக்கிழமை சமா்ப்பிக்கிறேன் என முதல்வா் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும், அப்படி ஆதாரத்தை அளித்துவிட்டால், அதற்கு உரிய தண்டனையை நீங்கள் ஏற்க வேண்டும். அப்படி, 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கைது செய்திருந்தால், அதற்குரிய தண்டனையை நான் ஏற்கிறேன் என்றும் கூறியிருந்தார்.

இதனை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி ஏற்றுக் கொண்டார். பேரவைத் தலைவா் அப்பாவு இருவரும் சனிக்கிழமை (ஜன. 11) ஆதாரத்தை என்னிடம் தரலாம் என்றாா்.

இதையும் படிக்க | அண்ணா பல்கலை. - பொள்ளாச்சி சம்பவங்கள்: முதல்வா் - எதிா்க்கட்சித் தலைவா் கடும் விவாதம்

இதனைத் தொடர்ந்து, இன்று காலை சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியவுடன் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் 20 பேர் பேரவைத் தலைவர் அப்பாவுவிடம் ஆதாரங்களை வழங்கினர்.

அதேபோல, திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பான ஆதாரங்களை வழங்கினார்.

இரு கட்சிகளும் ஆதாரங்களை வழங்கியுள்ள நிலையில் இன்று கூட்டத்தொடரில் இதுகுறித்து கடுமையான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் பாஜக கூட்டணி கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார். திமுக சட்டத்துறையின் 3வது மாநில மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஒரே நாடு ஒரே தேர்தல... மேலும் பார்க்க

ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்களால் மக்கள் அச்சம்- கே. அண்ணாமலை

சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட 8 இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றிருப்பது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது... மேலும் பார்க்க

சென்னையில் கூடுதல் புறநகர் ரயில் சேவை

பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக கூடுதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவை வரும் 20ஆம் தேதி தாம்பரம்-காட்டாங்குளத்தூர் இடை... மேலும் பார்க்க

தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நோபல் பரிசை இலக்காகக் கொள்ள வேண்டும் - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் நோபல் பரிசை இலக்காகக் கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்... மேலும் பார்க்க

பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் மக்கள் புறக்கணித்துள்ளனர்: பிரேமலதா

பொய் வாக்குறுதிகளால் பொங்கல் பரிசு தொகுப்பைத் மக்கள் புறக்கணித்துள்ளனர் என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகையை முன... மேலும் பார்க்க

திமுக, நாதக வேட்பு மனுக்கள் ஏற்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் மற்றும் நாம் தமிழகர் கட்சி வேட்பாளர் சீதா லட்சுமி ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு க... மேலும் பார்க்க