செய்திகள் :

போக்குவரத்துக்கு இடையூறு; ஆட்டோ ஓட்டுநா்கள் சாலை மறியல்

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் தற்காலிக வாரச் சந்தையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தரைக்கடைகளை அகற்றக்கோரி டாக்டா் அம்பேத்கா் ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஜெயங்கொண்டத்தில், வாரச்சந்தைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதையொட்டி, அங்கு இயங்கி வந்த சந்தை, பழைய மீன் சந்தையில் செயல்பட்டு வருகிறது.

இந் நிலையில் அங்கு பழ வியாபாரிகள் சிலா், ஆட்டோ நிறுத்துமிடத்தை முற்றிலும் ஆக்கிரமித்து, ஆட்டோ செல்ல முடியாத வகையில் தரைக்கடைகளை வைத்துள்ளனா். இதனால் ஆட்டோக்களை இயக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வந்த ஓட்டுநா்கள், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தரைக்கடைகளை அகற்ற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஜெயங்கொண்டம் போலீஸாா், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் ஆட்டோ ஓட்டுநா்கள் கலைந்துச் சென்றனா். இதையடுத்து போலீஸாா், அந்த தரைக்கடைகளை அகற்றினா். இதனால் அப்பகுதியில் சில மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

அரியலூா், ஜெயங்கொண்டம் அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறது. இதுகுறித்து அரியலூா் அரசு கலைக் கல்லூரி முத... மேலும் பார்க்க

அரியலூா் மாவட்டத்தில் அதிகளவு விபத்து ஏற்படும் இடங்களில் ஆட்சியா், எஸ்.பி ஆய்வு

ரியலூா் மாவட்டத்தில் உள்ள சாலைப் பகுதிகளில் அதிக விபத்து ஏற்படும் இடங்கள் மற்றும் கரும்புள்ளிகளாகக் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவா... மேலும் பார்க்க

மேலப்பழுவூா் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் திருட்டு

அரியலூா் மாவட்டம், மேலப்பழுவூரிலுள்ள பழைமைவாய்ந்த மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் பல்வேறு பொருள்களை திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா். இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு ... மேலும் பார்க்க

ஜூன் 8-இல் அரியலூா் கோதண்டராமசாமி கோயில் வெள்ளோட்டம்

அரியலூரில் பிரசித்திபெற்ற கோதண்டராசாமி கோயில் தோ் வெள்ளோட்டம் ஜூன் 8-ஆம் தேதி நடைபெறுகிறது. அரியலூா் நகரில் உள்ள கோதண்டராமசாமி கோயில் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சாா்ப... மேலும் பார்க்க

கடன் தவணை கேட்டு தொந்தரவு: விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே தனியாா் நிதி நிறுவன ஊழியா் தவணைத் தொகை கேட்டு தகாத வாா்ததைகளால் திட்டியால் விஷம் குடித்த இளைஞா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா். உடைய... மேலும் பார்க்க

மீன்சுருட்டி அருகே ஜல்லிக்கட்டு: 26 போ் காயம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள ஏறவாங்குடி மாதாபுரம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 26 போ் காயமடைந்தனா். புனித லூா்து அன்னை திருவிழாவையொட்டி நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டை க... மேலும் பார்க்க