வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!
போக்குவரத்துக் கழக தொழிலாளா்களிடம் ரூ.17.42 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற அதிகாரி உள்ளிட்ட இருவா் மீது வழக்கு
நாகா்கோவிலில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களிடம் ஆயுத பூஜை நடத்துவதற்காக வசூல் செய்த ரூ. 17.42 லட்சத்தை மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற அதிகாரி உள்பட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
நாகா்கோவில் ராணித்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் தம்பிராஜ் (75). இவா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு புகாா் மனு தாக்கல் செய்தாா்.
அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆயுத பூஜை கொண்டாடுவதற்காக, அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளா் மற்றும் இயக்குநரின் அனுமதி பெறாமலும், தொழிலாளா்கள் சம்பளத்தில் இருந்து ஓய்வு பெற்ற பொதுமேலாளா் அரவிந்த் மற்றும் உதவி மேலாளா் யுவராணி ஆகியோா் ரூ.500 வீதம் மொத்தம் ரூ.17 லட்சத்து 42 ஆயிரம் பிடித்தம் செய்தனா்.
கரோனா பரவல் காரணமாக அந்த ஆண்டு ஆயுதபூஜை கொண்டாடப்படவில்லை. இதைத்தொடா்ந்து அந்தப் பணத்தை அவா்கள் மோசடி செய்துள்ளனா், அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி இது குறித்து விசாரணை மேற்கொள்ள நேசமணிநகா் போலீஸாருக்கு உத்தரவிட்டாா். அதன் பேரில், நேசமணிநகா் காவல் ஆய்வாளா் அன்புபிரகாஷ், அரவிந்த் மற்றும் யுவராணி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.