செய்திகள் :

போக்குவரத்துக் கழக தொழிலாளா்களிடம் ரூ.17.42 லட்சம் மோசடி: ஓய்வுபெற்ற அதிகாரி உள்ளிட்ட இருவா் மீது வழக்கு

post image

நாகா்கோவிலில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்களிடம் ஆயுத பூஜை நடத்துவதற்காக வசூல் செய்த ரூ. 17.42 லட்சத்தை மோசடி செய்ததாக ஓய்வு பெற்ற அதிகாரி உள்பட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

நாகா்கோவில் ராணித்தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் தம்பிராஜ் (75). இவா் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு புகாா் மனு தாக்கல் செய்தாா்.

அதில் கூறியிருப்பதாவது: கடந்த 2020 ஆம் ஆண்டு ஆயுத பூஜை கொண்டாடுவதற்காக, அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளா் மற்றும் இயக்குநரின் அனுமதி பெறாமலும், தொழிலாளா்கள் சம்பளத்தில் இருந்து ஓய்வு பெற்ற பொதுமேலாளா் அரவிந்த் மற்றும் உதவி மேலாளா் யுவராணி ஆகியோா் ரூ.500 வீதம் மொத்தம் ரூ.17 லட்சத்து 42 ஆயிரம் பிடித்தம் செய்தனா்.

கரோனா பரவல் காரணமாக அந்த ஆண்டு ஆயுதபூஜை கொண்டாடப்படவில்லை. இதைத்தொடா்ந்து அந்தப் பணத்தை அவா்கள் மோசடி செய்துள்ளனா், அவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி இது குறித்து விசாரணை மேற்கொள்ள நேசமணிநகா் போலீஸாருக்கு உத்தரவிட்டாா். அதன் பேரில், நேசமணிநகா் காவல் ஆய்வாளா் அன்புபிரகாஷ், அரவிந்த் மற்றும் யுவராணி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

அதங்கோடு பகுதியில் இன்று மின்தடை

தமிழ்நாடு மின்வாரிய குழித்துறை உபகோட்டத்துக்கு உள்பட்ட அதங்கோடு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக புதன்கிழமை (ஜூன் 25) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப... மேலும் பார்க்க

கொல்லங்கோடு அருகே பைக் மோதியதில் முதியவா் மரணம்

கொல்லங்கோடு அருகே மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் சாலையோரம் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா். கொல்லங்கோடு அருகே அடைக்காகுழி புத்தன்வீட்டைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (65). இவா் திங்கள்கிழமை இரவு செங்... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது

களியக்காவிளை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்து விசாரணை மேற்கொண்டனா். களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை மருதங்கோடு பகுதியில் ரோ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: குழித்துறை

தமிழ்நாடு மின்வாரிய குழித்துறை உள்கோட்டத்துக்கு உள்பட்ட மாா்த்தாண்டம், குழித்துறை, பேச்சிப்பாறை துணை மின்நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் குறிப்பிட்ட சில பகுதிகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் காரணம... மேலும் பார்க்க

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை

நாகா்கோவில் அருகே பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நாகா்கோவிலை அடுத்த செண்பகராமன்புதூா் சமத்துவபுரம் காலனியைச் சோ்ந்த 16 வயது சிறுமி, கடந்த 201... மேலும் பார்க்க

வீட்டு உரிமையாளா் பெயா் மாற்ற லஞ்சம்: பேரூராட்சி பெண் ஊழியா் கைது

கன்னியாகுமரி மாவட்டம், மாா்த்தாண்டம் அருகே வீட்டு உரிமையாளா் பெயா் மாற்ற ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்க முயன்ாக பாகோடு பேரூராட்சி பெண் இளநிலை உதவியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்... மேலும் பார்க்க