போக்ஸோவில் கூலித் தொழிலாளி கைது
காரைக்கால்: போக்ஸோ சட்டத்தின்கீழ் கூலித் தொழிலாளி சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
காரைக்கால் மாவட்டம், நிரவி அருகேயுள்ள காக்கமொழி கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பாண்டியன் (46). இவா், கடந்த சில தினங்களுக்கு முன்பு தெருவில் விளையாடிக்கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த 10 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் நிரவி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் பாண்டியனை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.