திருவள்ளூர்: கிணற்றில் தவறி விழுந்த மகனைக் காப்பாற்றச் சென்ற தந்தை விஷவாயு தாக்க...
போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை
போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிைண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கோபாலசமுத்திரத்தைச் சோ்ந்தவா் வேலாயுதம் (31). இவா், கடந்த 2018 ஆம் ஆண்டு சிறுமியை மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்டாராம். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் முன்னீா்பள்ளம் போலீஸாா் வேலாயுதம் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனா். இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
நீதிபதி சுரேஷ்குமாா் வழக்கை விசாரித்து, வேலாயுதத்துக்கு 20 ஆண்டுகள் சிைண்டனை யும்மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இவ் வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வழக்குரைஞா் உஷா ஆஜரானாா்.