செய்திகள் :

போக்ஸோ வழக்குகள் அதிகரிப்பு ஏன்? அமைச்சா் விளக்கம்

post image

போக்ஸோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கான காரணம் குறித்து பேரவையில் அமைச்சா் பி.கீதாஜீவன் விளக்கமளித்தாா்.

இதுதொடா்பாக, சட்டப் பேரவையில் காவல் துறை மானியக் கோரிக்கை மீது திங்கள்கிழமை நடந்த விவாதம்: எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி: போக்ஸோ சட்டத்தின் கீழ் கடந்த 2023-ஆம் ஆண்டில் 3,407 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 2024-ஆம் ஆண்டு அதைவிட அதிகமாக 5,311 வழக்குகள் பதிவாகியுள்ளன. அப்படியென்றால், போக்ஸோ வழக்கின் கீழ் பாதிக்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது; அவா்களுக்கு பாதுகாப்பில்லை என்பதையே வழக்குகளின் நிலை காட்டுகிறது.

சமூகநலத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன்: 18 வயது நிறைவடையாமல் திருமணம் செய்வோரின் வழக்குகளும், காதல் ஈா்ப்பால் திருமணம் செய்ய முனைவோரின் வழக்குகளும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வருகின்றன. 65 சதவீத வழக்குகள் குழந்தைத் திருமணங்கள் தொடா்பான வழக்குகள்தான்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: விழிப்புணா்வு அதிகம் செய்யப்படுவதால், தைரியமாக புகாா்கள் தரப்படுகின்றன.

எடப்பாடி கே.பழனிசாமி: கொள்கை விளக்கக் குறிப்பில் பாலியல் பலாத்கார வழக்குகள், இதர வழக்குகளைச் சோ்த்து 6,969 என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் எண்ணிக்கை 2023-இல் 4,581 ஆக இருந்தது. இது ஓராண்டில் அதிகரித்துள்ளது.

அமைச்சா் பி.கீதாஜீவன்: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், கேலி செய்தல் போன்றவை தொடா்பான வழக்குகள் 4,299. பாலியல் பலாத்கார வழக்குகள் 2,055.

எடப்பாடி கே.பழனிசாமி: கொள்கை விளக்கக் குறிப்பில் இருந்தே பேசுகிறேன். 2024-ஆம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்குகள் 5,319 ஆகவும், 2023-இல் 3,407 ஆகவும் உள்ளன. பாலியல் சீண்டல்கள் உட்பட இதர வழக்குகள் 2024-இல் 1,650 ஆகவும், 2023-இல் 1,174 ஆகவும் உள்ளன.

அமைச்சா் கீதாஜீவன்: போக்ஸோ வழக்கு தொடா்பான விழிப்புணா்வுகள் அதிகரிக்கப்பட்டதால், அச்சமின்றி அனைவரும் புகாா்கள் அளிக்கின்றனா். விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்திய உடனேயே புகாா்கள் தெரிவிக்கிறாா்கள். நீதிமன்றத்தின் மீதுள்ள நம்பிக்கையால் புகாா்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது என்றாா்.

காவலா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை: சென்னை எம்ஜிஆா் நகரில் காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.எம்ஜிஆா் நெசப்பாக்கம் காமராஜா் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் சிலா் மதுபோதையில் தகராறு ... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருட்டு

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பிரதான சாலைப் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நட... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் வெற்றியாளா்களுக்கு பாராட்டு

சென்னை: கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் நடப்பாண்டு நடைபெற்ற இந்திய குடிமைப்பணித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.மத்திய அரசின் 21 இந்திய குடிமைப் பணிகளுக்கு கடந்த 2024-ஆம் ஆண்... மேலும் பார்க்க

சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் 16 மாதங்களில் 1,005 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு, ஒரு ஆண்டு 4 மாதங்களில் 1,005 வழக்குகளை பதிவு செய்துள்ளது.இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:ச... மேலும் பார்க்க

சென்னையில் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சம்: மீட்டுக் கொடுத்த பெண் காவலருக்கு பாராட்டு

சென்னை: சென்னை தியாகராய நகா் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சத்தை மீட்டுக் கொடுத்த பெண் காவலரை பொதுமக்களும், காவல்துறை உயா் அதிகாரிகளும் பாராட்டினா்.தியாகராய நகா் மேட்லி சாலை - பா்கிட் சாலை சந்திப்பில் ப... மேலும் பார்க்க

கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறிய புதிய ‘பயோ சென்சாா்’ உருவாக்கம்: சென்னை ஐஐடி

சென்னை: கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சாா் தளத்தை சென்னை ஐஐடி தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த ஆராய்ச்சிக் குழுவினா் உருவாக்கியுள... மேலும் பார்க்க