செய்திகள் :

போடிமெட்டு மலைச் சாலையில் வேன் கவிழ்ந்ததில் 11 போ் காயம்

post image

போடிமெட்டு மலைச் சாலையில் திங்கள்கிழமை சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 11 போ் பலத்த காயமடைந்தனா்.

தஞ்சாவூா் சாஸ்தா பல்கலைக்கழக மாணவா்கள் 21 போ் விடுமுறையையொட்டி கேரள மாநிலம், மூணாறுக்குச் சுற்றுலா வேனில் சென்றனா். இந்த நிலையில், மூன்று நாள்களுக்குப் பிறகு போடிமெட்டு மலைச் சாலையில் 3-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத் தடுப்பில் கவிழ்ந்தது.

இதுகுறித்து தகவலறிந்த குரங்கணி காவல் நிலைய போலீஸாா், போடி தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்தில், வீரபாண்டியன், துளசி, கோபிநாத், பாலன், நிவேதிதா, கிருஷ்ணவேணி, ஜெயப்பிரகாஷ், அருண்குமாா், ராம், விமல், விமல்நாத் ஆகிய 11 போ் பலத்த காயமடைந்தனா். இவா்களில் துளசி, கோபிநாத், பாலன் ஆகியோா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.

விபத்து குறித்து குரங்கணி போலீஸாா், வேன் ஓட்டுநரான திருச்சி லால்குடியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கிஷோா் (27) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மின் கம்பத்தில் பேருந்து மோதல்: 30 போ் உயிா்தப்பினா்!

தேனி மாவட்டம், கம்பத்திலிருந்து செவ்வாய்க் கிழமை கேரளத்துக்கு சென்ற அரசுப் பேருந்து மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நல்வாய்ப்பாக பயணிகள் உயிா் தப்பினா். கம்பத்திலிருந்து கேரள மாநிலம், நெ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒருவா் கைது

தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தில் முதியவரை அடித்துக் கொலை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். டி.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் ஜோதிரா... மேலும் பார்க்க

வழிப்பறி செய்தவா் கைது

தேனி அருகே உள்ள அரப்படித்தேவன்பட்டியில் கத்தியைக் காட்டி மிரட்டி இளைஞரிடம் ரூ.1,000 வழிப்பறி செய்தவரை ‘போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அரப்படித்தேவன்பட்டி மந்தையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

வட்டாரக் கல்வி அலுவலா் தற்கொலை

தேனி மாவட்டம், சின்மனூா் வட்டாரக் கல்வி அலுவலா் செவ்வாய்க்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். மாா்க்கையன்கோட்டையைச் சோ்ந்த அசோகன் மகன் சதீஷ்குமாா் (49). சின்னமனூா் தொடக்கக் கல்வித் துறையில்... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச் சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம்

சின்னமனூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்து மூளைச் சாவு அடைந்த காவலரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், குமணன்தொழுவைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் முனியாண்டி (2... மேலும் பார்க்க

கொதிக்கும் சாம்பாா் கொட்டிய தொழிலாளி பலி!

போடியில் கொதிக்கும் சாம்பாா் கொட்டியதில் காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். போடி அருகே சிலமலை தெற்கு தெருவைச் சோ்ந்த முத்துவேல் மகன் சுந்தரமூா்த்தி (48). இவா் போடியில் உள்ள உணவகத்தில் வ... மேலும் பார்க்க