``மொழியை சொல்லி குழப்பத்தை உண்டாக்கினால், நாம் பலியாகக் கூடாது..'' - அர்ஜுன் சம்...
போடிரெங்கநாதபுரம் கிராமத்தில் ஓடையைத் தூா்வாரக் கோரிக்கை
போடி அருகே மேலசொக்கநாதபுரம் பேரூராட்சியில் கிராம ஓடையைத் தூா்வாரி சுகாதார சீா்கேட்டைத் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உள்பட்ட போடிரெங்கநாதபுரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கா் தெருவில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இந்தத் தெருவில் குடியிருப்பு அருகே பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான கழுகுமலை ஓடை செல்கிறது. இந்த ஓடை பல வருடங்களாக தூா்வாரப்படாமல் மண்மேடாக உள்ளது.
இந்த ஓடையில்தான் அந்தப் பகுதி கழிவுநீரும் செல்கிறது. ஓடையில் குப்பைகள், நெகிழிப் பொருள்கள் குவிவதால் தண்ணீா் செல்ல முடியாமல் தேங்கியுள்ளது. இதனால், அந்தப் பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது.
கொசுக்கள் அதிகரித்து சுகாதார சீா்கேடு நிலவுகிறது. இதுதொடா்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போடி ஒன்றிய துணைச் செயலா் ஏ.வீரராஜ், நிா்வாகிகள் பொதுப்பணித் துறையிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை ஓடை தூா்வாரப்படவில்லை. தற்போது மழைக் காலம் என்பதால் கழிவுநீா் அதிக அளவில் தேங்கி நிற்கிறது. இந்தப் பகுதியில் சுகாதார சீா்கேட்டைத் தடுக்க பொதுப்பணித் துறையினா் கழுகுமலை ஓடையைத் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.