ஏற ஆரம்பித்த இந்திய பங்குச்சந்தை; Over Valued-ஆ இருக்கா? Investors என்ன பண்ணனும்...
போடி சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை
போடி சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு ரூ.2.39 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், போடி பேருந்து நிலையம் அருகே சாா்பதிவாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டடம் தற்போது, சேதமடைந்து காணப்படுகிறது. இந்தக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.2.39 கோடி நிதி ஒதுக்கியது.
இந்த நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் தொடங்கிவைத்தாா்.
இதில் போடி நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி சங்கா், நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள், பதிவுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.