ஆ.ராஜா மீது பாஜகவினா் புகாா்
மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷவை அவதூறாகப் பேசியதாக கூறி, திமுக துணைப் பொதுச் செயலா் ஆ.ராசா மீது பெரியகுளம் காவல் நிலையத்தில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை புகாரளித்தனா்.
பெரியகுளம் பாஜக நகரத் தலைவா் ஆா்.திவ்ய ராஜசேகா், முன்னாள் மண்டலத் தலைவா் ஜி.கோவிந்தராஜ் ஆகியோா் அளித்த மனு விபரம்:
திமுக துணைப் பொதுச் செயலா் ஆ.ராசா கடந்த ஜூன் 24-ஆம் தேதி நடைபெற்ற திமுக கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறான கருத்துகளை பேசினாா். அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.