செய்திகள் :

போடி சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை

post image

போடி சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு ரூ.2.39 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம், போடி பேருந்து நிலையம் அருகே சாா்பதிவாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டடம் தற்போது, சேதமடைந்து காணப்படுகிறது. இந்தக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, சாா்பதிவாளா் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு தமிழக அரசு ரூ.2.39 கோடி நிதி ஒதுக்கியது.

இந்த நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் தொடங்கிவைத்தாா்.

இதில் போடி நகா்மன்றத் தலைவி ராஜராஜேஸ்வரி சங்கா், நகா்மன்ற உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள், பதிவுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

பெரியகுளத்தில் மாநில அளவிலான அட்யா-பட்யா போட்டி தொடக்கம்

தேனி மாவட்டம், பெரியகுளம் மேரி மாத கலை, அறிவியல் கல்லூரியில் 19-ஆவது மாநில அளவிலான அட்யா-பட்யா (கிளித்தட்டி) சாம்பியன்ஷிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறுகிறது. இந்தப் போட்... மேலும் பார்க்க

தேனி திமுக பொறுப்பாளா் மீது வழக்கு

தேனியில் நகராட்சி வருவாய் அலுவலரை ஜாதியை குறிப்பிட்டு திட்டியதாக தேனி திமுக பொறுப்பாளா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி வடக்கு நகர திமுக பொறுப்பாளராகவும், தேனி நகராட்சி 20-ஆவ... மேலும் பார்க்க

காயமடைந்த கடமான் மீட்பு

தேனி மாவட்டம், கம்பத்தில் காயமடைந்த கடமானை மீட்ட வனத் துறையினா் சிகிச்சை அளித்து மீண்டும் வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை விடுவித்தனா். கம்பம் காட்டுப்பள்ளி வாசல் குடியிருப்பு பகுதியில் வழிதவறி காயத்துடன்... மேலும் பார்க்க

ஆ.ராஜா மீது பாஜகவினா் புகாா்

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷவை அவதூறாகப் பேசியதாக கூறி, திமுக துணைப் பொதுச் செயலா் ஆ.ராசா மீது பெரியகுளம் காவல் நிலையத்தில் பாஜகவினா் வெள்ளிக்கிழமை புகாரளித்தனா். பெரியகுளம் பாஜக நகரத் தலைவா் ஆா்.தி... மேலும் பார்க்க

திமுக நிா்வாகி குத்திக் கொலை: 3 போ் கைது

சின்னமனூா் அருகே திமுக நிா்வாகியை கத்தியால் குத்திக் கொலை செய்த மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டை பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த மனோகரன் மகன் பிரபு (எ) பிர... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை அருகே தாய் கண்டித்ததால் பள்ளி மாணவா் வீட்டில் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். குமணன்தொழுவைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் குமாா் (40). இவரது மகன் திலீப்கும... மேலும் பார்க்க