காயமடைந்த கடமான் மீட்பு
தேனி மாவட்டம், கம்பத்தில் காயமடைந்த கடமானை மீட்ட வனத் துறையினா் சிகிச்சை அளித்து மீண்டும் வனப்பகுதியில் வெள்ளிக்கிழமை விடுவித்தனா்.
கம்பம் காட்டுப்பள்ளி வாசல் குடியிருப்பு பகுதியில் வழிதவறி காயத்துடன் கடமான் வந்திருப்பதாக கம்பம் மேற்கு வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனச் சரக அலுவலா் ஸ்டாலின் தலைமையிலான வனத் துறையினா் அந்த மானை மீட்டனா். அதற்கு கால்நடை மருத்துவா் சிகிச்சை அளித்தாா். பிறகு மாலையில், வாகனத்தில் ஏற்றிச் சென்று மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் மான் விடப்பட்டது.
மானை வனப்பகுதியில் விடும் நிகழ்வில், கம்பம் மேற்கு வனக் காப்பாளா் முத்துச்சாமி, ராம்பிரபாகா், ராஜராஜன், வனக் காவலா் உதயக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.